சனி, 19 செப்டம்பர், 2020

சரணாகதம்

 சரணாகதம் என்பது   அடைக்கலம் புகுதல், தஞ்சம் அடைதல் என்னும் பொருளில் ஆளப்படும் சொல்.

சரண் + ஆகு + அது + அம் = சரணாகதம்.

சரண்புகுதல்.

இனி, கதம் என்பதைத் தனிச்சொல்லாகக் கொண்டு:

கதம் -  அடைதல்.

சரண் +  கதம் >  சரணாகதம் எனினுமாம்.

சரண் + கதி > சரணாகதி என்பதுபோல்.

இடையில் வருவது  ஆ ; ஆதல் குறிக்கும் சொல். இடையில் ஆகதம்,  ஆகதி என்பவாய் வருதலின்,  இவை வினைத்தொகை.  வலிமிகாது. இவ்வாறும் விளக்கலாம்.

சரண் என்பதன் மூலம் அரண்.

அரண் > சரண்

சரண் என்பது முழுமையாய் " சரண்புகுதல் " என்பதே.

அரண்புகுதல் என்பதும் அது.

நாளடைவில் புகுதல் என்பது விடுபட்டு,  சரண் > சரணம் ஆயிற்று.

இன்னொரு காட்டு:  அமண் - சமண்.

அடு > சடு > சட்டி.   ( + இ).

இந்தப் பாடலில்   சரணாகரம் என்பது  ஆளப்பட்டுள்ளது.

" தாண்டவம் செய் தாமரை,  பூஞ்சரணாகரம்   நம்பும் யானும்

அடிமை அல்லவோ?  --  எனை

ஆண்டருள் ஜெகதம்பா யானுன்

அடிமை அல்லவோ".  (பாபநாசம் சிவன்)

பொருள் :  குளத்தில் ஆடும் தாமரை உன்னைப் பணிகிறது. 

உன்னிடம் அடைக்கலம் புகுகின்றது,  அதுபோல்  யானும் பணிகின்றேன். நான்

உன் அடிமை ஆவேன். (என்னைக் காப்பாற்று ) என்றபடி.

பூவினால் சொல்லப்படும் சரணம் பூஞ்சரணாகரம்


உங்கள் உசாவலுக்கு:

சாம்பிராணி  https://sivamaalaa.blogspot.com/2014/06/blog-post_2261.html

"உழிஞைத் திணை" https://sivamaalaa.blogspot.com/2014/10/blog-post_77.html

பரிகாரம்  https://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_95.html

அரசன் அரட்டன் https://sivamaalaa.blogspot.com/2020/09/blog-post_10.html

அரசனும் அரணும் https://sivamaalaa.blogspot.com/2020/06/blog-post_11.html

சாம்பிராணி முதலிய பொருட்கள் https://sivamaalaa.blogspot.c

Pom/2018/09/blog-post_23.html

அரணும் சரணும் https://sivamaalaa.blogspot.com/2017/08/blog-post_31.html

அரணும் சரணும் https://sivamaalaa.blogspot.com/2018/11/blog-post_20.html

( இவற்றுள் தொடபற்றவற்றை புறக்கணித்துவிடுங்கள்.  நன்றி).


தட்டச்சுப் பிறழ்வுகள் பின்னர் சரிபார்க்கப்படும்.



கருத்துகள் இல்லை: