வியாழன், 17 மார்ச், 2022

இறப்பும் ஏற்பட்ட வரப்பும்--- கடவுள்செயல்

 போனவர்கள் போய்விட்டார் என்று சொல்லி

இருப்பவர்கள் வருந்துகின்ற உலக விந்தை!

ஆனஒரு செயல்தன்னால் போன மாந்தன்

அவ்வாறே திரும்பிவர அறிந்தோ மில்லை.

தீனர்பெருஞ் செல்வரென வேறு  பாடு

தெரிந்திடவும்  இதிலேதும் முடிவ தில்லை;

காணுமொரு ஞாலத்தின் கதியைத் தானே

கடவுளியக் கம்மெனலும் காட்சி யன்றோ?


போனவர் - இறந்தவர்

இருப்பவர் - வாழ்கின்றவர்

தீனர் - ஏழைகள்

ஞாலம் - உலகம்

கதி - செல்வழி

காட்சி - கண்ட உண்மை 

வரப்பு  - எல்லை

இறப்பு - மரணம்


தீனர் என்ற சொல்:  https://sivamaalaa.blogspot.com/2018/10/blog-post_22.html

தின்பதற்குத் தேடுவதையே ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செலவிடுவானாகில் அவன் தீனனே.   அவன் வாழ்வில் உண்பதே முதலாகின்றது. மற்றும் தின்னுதல்  -  தீனி என்ற சொற்கள் விலங்குபோல உண்ணுதலைக் குறிக்கும்.  விலங்குணவு உண்ணும் மனிதனையும் குறிக்கும். ஏழ்மை என்பது அடிப்படைத் துன்பமாகும்.

கருத்துகள் இல்லை: