வெள்ளி, 4 மார்ச், 2022

ஆச்சரியம்

 ஒன்றைக் கேட்டு அல்லது பார்த்த மாத்திரத்தில்,  " ஆ "  என்று வியத்தல் இன்றும் உள்ளதே  ஆகும். ஆ என்ற ஒலி,  வியப்பில் மட்டுமின்றி, ஏனைத் தருணங்களிலும் எழக்கூடியது.

ஒரு கணவர் வேடமிட்டுக்கொண்டு மனைவியின்முன் வந்து நிற்கையில், அவளால் அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை. அவர் தம் வேடத்தைக் கலைத்தபின் "  ஆ! நீங்களா!"  என்று வியக்குங்கால்  வரும் ஒலிக்குறிப்பாகிய "ஆ!" என்பதைக் கவனிக்கவும்.

வியப்பில் ஆழ்ந்துவிட்ட மனிதன்,  ஓர் சரிவை அடைகின்றான்.  சரியம் என்ற சொல் இந்த நிலையைத் தெரிவிக்கிறது. இஃது ஓர் தளர்வு நிலை ஆகும்.

ஆ+  சரி + அம் = ஆச்சரியம்  ஆகின்றது.  

சரி என்பது ஒப்புக்கொள்வு குறிப்பதாகவும் ஆகிறது.

இன்னொரு வகையிலும் விளக்கலாம்.  பின்பு  அளவளாவுவோம்.


அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்



கருத்துகள் இல்லை: