புதன், 23 மார்ச், 2022

விமான விபத்தில் இறந்தோர்க்கு இரங்கல்.


வெண்பா

நூற்றுமுப் பத்திருவர் நொய்விதாய்  மாய்ந்தனரே
காற்றில் பறந்தவா னூர்தி  கறங்கிவிழ, 
ஆற்றுமோ நெஞ்சம் அடுதுயர்காண் சீனாசெல்
கூற்றுவன் பேய்க்கூத்  தினை.

எங்கள் இரங்கல் மறைந்தோர் குடும்பத்தினர்க்கு.

நொய்விதாய் -  நொடியில்,  கறங்கி -  சுழன்று,   அடுதுயர் -  பெருந்துயர்.
கூற்றுவன் -  எமன். பேய்க்கூத்து - இரக்கமற்ற ஆட்டம்.
சீனாசெல் - சீனாவுக்குச் சென்ற.

கருத்துகள் இல்லை: