ஞாயிறு, 27 மார்ச், 2022

பசலைக்கீரைச் சாம்பாரும் பகலுறக்கமும்

 

பொடிஉரு ளைக்கிழங்கு பொரித்துவை சாப்பாட்டில் 15

கடிதரச் சுவைத்திடக் காய்முருங்கைச் சாம்பாரில் 16

இடுவத னில்பசலைக் கீரையைச் சமைத்துண்பாய் 15

படுபகல் ஒருபாயில்   பகவறியாத்     தோய்வுறக்கம்  16


குறிப்புகள்:

பொடிஉருளைக் கிழங்கு -  ஒருவகைச் சிறு உருளைக் கிழங்கு

கடிதர - கடித்துக்கொள்ள

தோய்வுறக்கம் -   ஆழ்ந்த உறக்கம்

பகவறியா -  பகுதிபடாத

இடைநீங்கா  -  என்றாலும் எழுத்துக் கட்டளை அதுவே ஆகும்.  ஆனால்

மோனை இராது.


இந்த கவியில் முதலடி மூன்றாம் அடிகள் மெய்யெழுத்து நீக்கி   15 

எழுத்துக்கள்.  இரண்டாம் நாலாம் அடிகள் அவ்வாறே  16  எழுத்துக்கள்

உள்ளனவா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.


பசலைக் கீரை குளிர்ச்சி என்பார்கள்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.



கருத்துகள் இல்லை: