சனி, 12 மார்ச், 2022

போர்வேண்டாமென்ற பூசை

 பிள்ளைகுட்டி பெரியவீடு உறவு சுற்றம்

பெரியதொழில் அரியநண்பர் இருந்த போதும்

வள்ளலாக  எல்லாமும் வழங்கும் பூமி

வாழ்மக்கள் சண்டையின்றி வதிதல் வேண்டும்;

மெள்ளநல்ல அமைதியுடன் இருந்த போழ்தில்

மேல்மூச்சு வருவதற்குள் தூள்கி ளப்பி

உள்ளிருந்து வந்துவிட்ட உக்கி  ரேனின்

ஒருசண்டை போல்வந்தால் என் தான் செய்வோம்?


மட்டமுள்ள மண்தரையில் மேடு பள்ளம்

மனம்தடுக்கும் கரடுமுரடு வாரா வண்ணம்

இட்டபுதுப் புத்தியது இடிந்தி  டாமல்

எம்சிவனைப் பூசையிலே வணங்கி  னோமே

என்றும்நலம் வருகவந்து தங்க வேண்டும்

எவ்வில்லம்  ஆனாலும் எழுச்சி வேண்டும்

நன்றுநங்கள் பூசைதனைப் படத்தில் காண்க

நம்வேண்டல் பலித்திடுக நலமே  வாழ்க.




கருத்துகள் இல்லை: