புதன், 30 மார்ச், 2022

மையம் , இரு கருத்துகள் அடிப்படை

 மையம் என்ற சொல்லை ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் அணுகி விளக்கலாம். இதற்கான வசதி தமிழில் மிகுதியாய் உள்ளது.

முன்னரே விளக்கியவற்றை  இங்கு முழுவதுமாகத் தருவிக்காமல்  சில குறிப்பிட்ட பின் மற்றொரு விளக்கத்தை முன்னிறுத்தலாம்.

நடுவில் உள்ள ஓர் இடமோ பொருளோ, நாற்புறமும் உள்ள் இடங்களை மருவி நிற்பதனாலேதான் மையம் ஆகின்றது.  இது நல்லபடியாக விளக்கப்பட்டுள்ளது. ஒரு வட்டத்தின் மையமானது, அவ்வட்டத்தில் எல்லாப் புள்ளிகளையும் மருவி நிற்கின்றது.

மரு என்பதன் அடி மர் என்பது.

சுருக்கமாக,

மர் > மய்>  மை > மையம் ஆகும்.

இதுபோல் திரிந்த இன்னும் உள்ள சில:

விர் >  விய் > வியன். ( வியனுலகு).  விர்> விரி> விரிவு.

கர் > கை.    கர்> கரம்;    கர்> கை.

அல்லது கை> கர் எனினுமாம்.


மர் > மரு.

மர் > மர் >  மர்த்து.  > மத்து ( இடைக்குறை)  > மத்தியம்.

மர்த்தியம்> மத்தியம் என்பதில்,  இ அம் என்பன இடைநிலையும் விகுதியும்.


மையத்துக்கொல்லை என்பது ஊர்களுக்கு நடுவான இடத்தில் உள்ள புதைகுழி  நிலம் என்று பொருள் விளக்கலாம்.


மாய் >  மய் > மய்யம் > மையம்.  இதில் மாய் , அதாவது இறந்தோரைப் புதைக்கும் இடம் என்று பொருளுரைக்கலாம்.

இங்கு இதை முதனிலை குறுகி அமைந்த தொழிற்பெயர் என்பது சரியாகும்.

ஆகவே சுடுகாடு குறிக்கும் மையம் என்பது முதனிலை குன்றியமைந்தது.

மையம் என்பது இருபிறப்பி ஆகும்.

அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்னர்.


கருத்துகள் இல்லை: