சனி, 5 மார்ச், 2022

மெட்டு என்றால் என்ன?

 மெட்டு என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளோம்.  ஆனால் இந்தச் சொல் எவ்வாறு அமைந்தது என்று இதுவரை விளக்கியதாக நினைவு இல்லை. .இங்கோ வேறு எங்குமோ தேடிப்பார்க்கவில்லை.  வேறு யாரும் அதை விளக்கியிருந்து அது இணையத்தில் கிட்டுவதாக யாம்  அறிந்திருந்தால், பிறரும் கூறியதையே ஏன் கூறவேண்டும்  என்று விலக்கிவிடலாம். அவ்வாறு இதுவரை விளக்கியுள்ளதாகவும் யாம் அறிந்திருக்கவில்லை.

இராகம் என்பது வேறு,  மெட்டு என்பது வேறு.  இங்கு மெட்டு என்ற சொல்லினமைப்பை மட்டும் விளக்குவோம்.

மெட்டு என்பதில், மேல்,  இடு ( இட்டு) என்ற இருசொற்கள் உள்ளன. இவை திரிந்து ஒருசொன்னீர்மை எய்தின.

ஓர்  இசையின் அல்லது பாட்டின் போக்கைத் தழுவிப் பாடிக்கொள்வது மெட்டு.

எடுத்துக்காட்டு:

1. ஜெகத்ஜெனனி  என்ற இரதிபதிப்பிரியா இராகப் பாடலும்.  சுத்தானந்த பாரதியாரால் இயற்றப்பட்டு,  எம். எம். தண்டபாணி தேசிகரால் பாடப்பட்டது.

2. மனம் கனிந்தேன் என்ற  பாபநாசம் சிவன் பாட்டு. எம்.கே. தியாகராச பாகவதர் பாடியது.

ஜெகத்ஜெனனி என்பது மூலப்பாடல் போல் தெரிகிறது.

மேல்  > மே.  (கடைக்குறை)..  மெ. (முதற்குறுக்கம்).

இட்டு . ( இடப்பட்டது ).

மே+ இட்டு>  மெட்டு.  இதில் முதலெழுத்து குறுகிற்று.

சொற்கள் குறுகியும் அமையும்.   எ-டு:  தோண்டு > தொண்டை.  காண் > கண்.

மெட்டு:  முன்னரே புனையப்பட்ட பாட்டின் இசைப்போக்கினைத் தழுவி மேல் இட்டுப் பாடப்பட்ட பாட்டு.

அறிக மகிழக.

மெய்ப்பு பின்னர்.

Please do not copy, republish and backdate or do any one of these. You may use it in discussion in your class or study.


கருத்துகள் இல்லை: