வியாழன், 31 மார்ச், 2022

சுகம் எங்கே - உணர்ந்த நாய்க்குட்டி.

 சுவரில்  சார்த்தி வைத்த  துடைப்பம் தன்னை

சுகம்வேண்டித் தன் தலைமேல் இழுத்துப்போட்டு

இவள்( இந்த நாய்க்குட்டி ) தலை நுழைத்தே

என்ன ஒரு  சுகம் கண்டு  தூங்கு  கின்றாள்?


வாசல்களில் படுத்தபடி வாழ்க்கை தம்மை

வந்த பெரும் பாகமும் முடித்துக்கொண்ட

கூசலிலா வைரவர்கள் கூட்டம் தாமே

கொண்ட சுகம் எங்கே  என்றறிந்துயர்ந்தார்.


சுகமெங்கே என்றே  உகந்தே  அறிந்துவாழ்

வகைதெரிந்த நாய்க்குலமே வாழ்க  நெடுங்காலம்.





சுகம்கண்ட  நாய்க்குட்டியின் படம்:


இந்த விளக்கத்துக்கு நீங்கள்  உங்கள் விளக்கத்தை வரைந்து பின்னூட்டம் இடவும்


மெய்ப்பு  பின்னர்






கருத்துகள் இல்லை: