செவ்வாய், 8 மார்ச், 2022

செய்திகளில் சலித்தெடுக்கும் கருத்தியல்கள்

 (அறுசீர் விருத்தம்)

காதுக்குள் அலைபோல் செய்தி

கருத்துகள் காட்டும் வந்தே

மோதிடும் நெஞ்சில் ஆங்கு

முழுத்தத் துவம்மு கிழ்க்கும்;

யாதொரு தயக்கம் இன்றி

யாத்துடன் பயனே காண்க;

மீதமாய் நிற்கும் வாழ்வில்

மேலடைந் திடுவீர் உண்மை!



இருளினில் ஒளிபோல் உண்மை

இருவிழிக் கின்பம் சேர்க்கும்,

பொருண்மையில் நாட்டம் கொள்வார்

புவியினில் யாங்கும் காண்பார்;

தெருள்பெறத் தேர்ந்து கொள்வோர்

தேடின யாண்டும் வான்கார்

குளிர்மழை போல்பெய் காலை

குதித்தெழு மகிழ்கொள் வாரே.


அன்றாடச் செய்திகளிலும் உண்மை கண்டு

அவற்றை வாழ்வில் பயன்படுத்திக் கொள்ளலாம். 

சற்றே தேடிப்பார்த்தல் அவை கிட்டிவிடும். 


தெருள் =  தெளிவு

வான் கார் -  வானில் மேகம் கருத்து (மழை பொழிதலைக் குறிக்கும்.)

மகிழ் -  மகிழ்ச்சி

முகிழ்க்கும் - ஊறி வெளிவரும்


யாப்பு:

ஒவ்வொரு வரியிலும் மூன்று சீர்களில்

நடுச்சீர் நிரையாகவும் நேராகவும் மாறிமாறி

வந்து ஒலிக்கிளர்ச்சி தரும்படி தொடுக்கப்பட்டது.

Less  monotony.

தெருள்  -  குளிர்.   இங்கு ர - ள முறைமாற்று இனவெதுகை. வழக்கம்போல் வரும் எதுகைக்கு இது வேறுபட்டு இன்பமுறுத்தும்.

கருத்துகள் இல்லை: