திங்கள், 21 மார்ச், 2022

நல்லெண்ணம் போர்களைத் தவிர்க்கும்.

 பங்காளிச் சண்டைகள் நடக்கின்ற  போது

பக்கத்தில் உள்ளாரும்  படுகுத்தல் செய்வார்.

எங்கேனும் இப்புவியில் எதனாலோ ஓடும்

இதுபோலும் செய்கைகள் நமக்காகும் பாடம்!

மங்காத நல்லெண்ணம் மயக்கற்ற மூளை

மாநிலத்து நாடுகளில் நிலைகொள்ளும் நாளில்

தங்காது  பேரழிவு தடைகொள்ளும் தீமை

தாரணியும் ஓரணியில் சீர்பெறவே காண்பீர்.


பங்காளி - முன் ஒன்றாயிருந்து பிரிந்தோர்

படுகுத்தல் -  சண்டையைப் பெரிதாக்குதல்.

ஓடும் - நிகழும்

தாரணி - பூமி.

மயக்கற்ற - தெளிவான

கருத்துகள் இல்லை: