ஞாயிறு, 20 மார்ச், 2022

இனிப்புநோய்க் காலில்புண் ஏற்படுதல்


 காலுக்கு வந்தரத்தம் மேலேறிச் சென்று

காயாமல் இருதயத்துள் புதிதாகி வந்து 

ஆளுக்கு வேண்டியதோர் அருநன்மை தந்தே

அன்றாடம் உடலுக்கு வலிமைதர வேண்டும்

தோலுக்குக் கீழிருந்து கருநிறமே காலில்

தோன்றுவதும் அரிப்பென்றால் துயர்தன்னை நீக்க

நாளுயர்ந்து  செல்லாமல் நன்மருந்து நாடி

நயமாக மருத்துவரை நண்ணுதலும் கொள்வீர்.


வந்த அரத்தம் >  வந்தரத்தம்.

அரத்தம் -  இரத்தம்

காயாமல்  - "வந்தரத்தம் காயாமல்" என்று இணைக்க.

அருநன்மை -  அரிய நன்மை

நாளுயர்ந்து -  காலம் கடந்து

நண்ணுதல் --  அணுகுதல்



இனிப்புநீர் என்னுமோர் இன்னல்நோய் வந்தால்

தனித்துன்பு பற்பல தம்பீ -----  இனித்தயக்கம்

இல்லாமல் போய்க்காண்க  இத்துன்பம் வந்தக்கால்

ஒல்லும்வாய் தேடேல்  நலம்.


துன்பு  -  துன்பம்.  தனித்துன்பம் - இணையில்லாத ஒரு துன்பம்.

வந்தக்கால் - வந்த காலத்தில்.

ஒல்லும்வாய் - இயன்றவழியில்

தேடேல்  - தேடுக


அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.


கருத்துகள் இல்லை: