ஞாயிறு, 3 ஜூலை, 2016

சாம் > சாமி

சாமியை கீழே விழுந்து ( சாய்ந்து அல்லது முன்னாகத் சாய்ந்து) வணங்குவது இன்றும் உள்ளது, பிற மதத்தாரும் முன் வீழ்ந்து வணங்குதல் காண்கிறோம்.  சாதல் என்பதும் சாய் என்ற சொல்லிலிருந்து பிறந்ததே.  மொழியில் இவையெல்லாம் கருத்து வளர்ச்சியில் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

சா >  சாய்,  சாய்தல்.
சா >  சாதல்.
சா >  சாம் >  சாமி >  சுவாமி >  ஸ்வாமி,

சாம் என்பதே மூலம் என்பதை பிற தமிழறிஞரும் கூறுவர்,

சாம் என்ற மூலம் தமிழில்மட்டும் காணப்படுவது. இங்கு யாம் கூறுவது சாம் என்ற மூலத்திற்கு மூலமாவது‍  அதாவது அடிமூலம் சா என்பது.  அத்துடன் அதன் பின்னணிக் கருத்தையும் விளக்கினோம்.

சாமி  : பெறப்பட்ட பொருள்:   சாவு முதலிய நடப்புகளைத் தீர்மானிப்பவன் ;
வணக்கத்திற் குரியவன் . 

தொடர்புடையன

https://sivamaalaa.blogspot.sg/2016/06/blog-post_12.html

https://sivamaalaa.blogspot.sg/2016/07/blog-post_3.html




கருத்துகள் இல்லை: