வியாழன், 21 ஜூலை, 2016

புட்பக விமானம்/ வானூர்தி

பூக்கள் செடியிற் பிரிந்து வெகுதொலைவுக்குப் பறப்பதில்லை. வெறும் பூக்களால் ஆன வானூர்தி அல்லது விமானம் பறக்கவியலாதது.
கடவுள்கள் பறப்பதற்கு விமானம் அல்லது வானூர்தி தேவைப்படுவதில்லை. அவர்கள் எப்படியும் பறக்கலாம்.

ஆகவே இலங்கை சென்ற  புட்பக விமானம் ஓர் இன்றியமையாத கருவியாகச் செயல்பட்டிருக்கவேண்டும். வெறும் பூக்கள் அல்ல.

புள் + பகம் = புட்பகம் ஆகிறது.

புள் என்பது பறவை.

பகம் என்பது பகுதி. பகு+ அம் = பகம். இவ்விமானம் அல்லது வானூர்தி  முன்பகுதி பறவை போன்ற  உருவிலானது என்பது பொருள்.

இது புஷ்பக என்று பிறழ உணரப்பட்டு , புஷ்பம் என்பதனோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.  புள் என்ற சொல் தெரிந்த வான்மீகியும் தமிழனாதல் வேண்டும்.சங்கப் புலவன்.  இராமகாதையில் பல சொற்கள் தமிழினுடன் தொடர்பு உடையவை ஆகும். இது முன்னர் நாம் கூறியதேயாம்.

கருத்துகள் இல்லை: