செவ்வாய், 26 ஜூலை, 2016

"ரேணுகா" என்ற பெண்ணின் பெயரை....

இப்போது "ரேணுகா" என்ற பெண்ணின் பெயரை ஆய்வு செய்வோம்.
இது தமிழ்ப் பெயர். இந்தியப் பெயர் என்றும் வைத்துக்கொள்ளலாம். தமிழ் நாடு மட்டுமின்றிப் பிற மாநிலங்களிலும் வழங்கும் பெயர். அம்மன் பெயர்.

காளி என்றால் கருப்பம்மை என்று பொருள் என்பது உங்களுக்குத் தெரியும்.
கள், காள் என்பன கருப்புக் குறிக்கும் அடிச்சொற்கள். அதுபோலவே, இரேணுகா என்பதில் முன் நிற்கும் அடிச்சொல் இர் என்பது.

இர் ‍ >  இருள்.
இர்  > இரவு.

இர் > இராம(ன்)
இர் >  இராவண்ணன் > இராவணன். இடைக்குறை : ண்.

இப்போது ரேணுகா.

முதல் அடிச்சொல்; இர்.
அடுத்து: ஏண் >  ஏற்றம்;  கூடுதல்;  அதிகம்.
ஏணி என்ற சொல் இங்கிருந்து வந்தது,

கா என்பது அக்கா என்பதன் முதற்குறை.  (அக்)கா.  மூத்தவள்,

இர்+  ஏண் + கா ‍  :  கருப்பு மிகுந்த பெண்.  காளி அம்மன்.

ஏண் > ஏணு : உகரம் சாரியை.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இது வெட்டியான் கூட்டத்தினர் வணங்கிவந்த  அம்மன் என்பது தெரிகிறது,  இத்தெய்வத்தை வணங்கும் முறைகளில்  அவர்களின் பங்களிப்பு முன்னிற்கிறது.  சாவின் திரமறிதலே ( திறம்  அறிதலே ) சாத்திரம்  என்ற எம் முன் இடுகை காண்க.  மேலும் ஜமதக்நி
என்பதும்  சம+ தக்கவன+ நீ  என்ற தொடரின் வெட்டுச் சேர்க்கையும் வலிதிரிபும்    ஆகுமென்பது தெளிவாகும்.புராணத்தினால் வெட்டியான் தொடர்பை நீக்க  இயலவில்லை.

மாரி : மா= கருப்பு.     .மாரியும் கரிய கடவுளே ஆகும் .

வேறு சொன் முடிபுகள் 

இரேணுகை என்பது  இரண்டு உயர் கைகள் என்றும் பொருள் தரும். பின் விளிவடிவில் " இராணுகா"  ஆகுதல் கூடும் . இச் சொற்கோவை  பொருளில்   "  இரண்டு அருட் கைகள் ".- இரு + ஏண் + (உ )+ கை   அதுவாம்.   . உகை ‍-  எழுச்சி எனினுமாம்  இப்படிக் கொண்டால்  "இரு (அருட் ) கைகளின் உயர் எழுச்சி"  என்றாகி  ஆகுபெயராய்  அம்மனுக்காகும் ,


கருத்துகள் இல்லை: