புதன், 13 ஜூலை, 2016

உயிர்களிடம் அன்பு

விலங்கியல் தோட்டத்தில்
குரங்கிற்குத் தனியிடம்;
அரங்கொன்றில் அமர்ந்து
மரங்களிடை இலையுணவு.

குரங்கெனப் பிறந்தனவே;
வரங்கள்பல பெறுந்தகைமை
இருந்ததனால் உயர்ந்தனவே;
சிறந்தஇடம் நிரந்தரமே.

நீர்த்தேக்கம் அருகினிலே;
பார்த்தயரும் நல்லழகே'
கூர்த்தவிழிக் குட்டிகளால்
கூடிவரும் மகிழ்வெல்லை.

உயிர்களிடம் அன்புவைப்பாய்;
ஓங்கிவள ரும்வாழ்வே!
பயிர்கள்போல் பசுமைபெறும்
பைந்தமிழின் இனிமைவரும்.




கருத்துகள் இல்லை: