திங்கள், 25 ஜூலை, 2016

கிடையாது காதலென்று.............

திரையினிலே காதலிலே தேனாறே  ஓடும்;
தேர்ந்தெடுத்த நாயகியோ ஆணோடு பாடும்.
சிறைவீட்டுக்  கைதியெனச் சீர்கெட்டு வாடும்
சிறு அகவை ஆடவரும் பெண்களுமே தேடும்
ஒருசரக்கும் உளதென்றால் அதுதானே காதல்;
ஓடுகின்ற படச்சுருளில் கூடுவதாம் காதல்.
பெருநகரம் சிற்றூர்கள் யாங்கணுமே காதல்.
பெறவேண்டும் அதுவாழ்க்கை என்கின்ற ஆவல்.

பிள்ளைக்கும் பெண்ணுக்கும் முறைப்படியே பார்த்து,
பிறந்தநாளும் கோத்திரமும்  அறிந்தபடி சேர்த்து
நல்லநாளில் மணம்வைக்க பெற்றோர்கள் முந்த
நாங்களவை பேசிவிட்டோம் என்றுரைத்த‌ மக்கள்.
உள்ளபடி  அகத்துக்குள் எமன்புகுந்த நேரம்
ஒருவாறு தொடங்கியதே எனப்புகல வேண்டும்.
கள்ளத்துக் காதலென்று பெற்றவர்கள் சொல்ல‌
உள்ளத்துக் காதலென்று பிள்ளைபெண் சொன்னார்.

முடியாதென்  றேபெற்றோர் மணவினைந டாத்த‌
மூடியவாய் திறவாமல் மணமகளும்  காத்தார்
இடியாமல் குடிபுகுந்து படிபோற்றி  வாழ்ந்தார்
என்பதுபோல் உலகுக்கு வெளிக்காட்சி செய்தே
உடையாத காதலனோ டொன்றுபட்டுச் சூழ்ந்தார்
உள்வந்த புதுக்கணவன் உயிர்பிரிய வீழ்ந்தான்!
கிடையாது காதலென்று கிழித்துவைத்த கோடு
கேடென்றே உணர்த்தியதோ காதலரின் பாடு?

edited.26.7.16  TM 25.7.16 some words changed. reedited 2607160853

There have been several murders of  such plot occurring recently/  In these cases. the couples went
through mostly arranged marriages and later one party in the wedlock    tried to rectify the mismatch by killing the spouse to attain the desired life with the lover.  Parents arranging marriages should think carefully and should not imagine such events would not occur to their children.

கருத்துகள் இல்லை: