திங்கள், 11 ஜூலை, 2016

விலங்குகள் சொல்லாத‌ வெற்றுரை

மனிதன் உயர்வென் றவனே மதிப்பின்
இனிது மதுவாமோ இவ்வுலகில் தோழரே
நாய்பூனை சொன்னாலே நல்ல திலையேலோ 
காய்பழம் காணல் அரிது.  1

நாய்பூனை நல்லுரை தாரா நிலையாலே
வாய்திறந் தானே வழங்கிக்கொள் சான்றிதழைக் 
கூயுரைத்துக் கும்மாளம் கொட்டுகிறான் அங்கினிப்
போய்மறுக்க உள்ளார் எவர்.  2


விலங்குகள் சொல்லாத‌ வெற்றுரை கேட்டுக்
கலங்குதல் மற்றும் களித்தலும் வீணே
நிலங்கவர் நெஞ்சத்தான் நில்லாத் திருடன்
நலம்பிதற்றல் நாணுத் தரும்.  3

பொருள்:


1.  இனிது மதுவாமோ   -   இனிமையானதும்   அதுவாகுமா ?
    நல்ல திலையேலோ -   நல்லது  இல்லையேல்;    ஓ -  அசை .
    காய்பழம் காணல்  -  ஏற்கத்  தக்கது ,  தகாதது  வேறுபிரித்து  அறிதல்.

2   தாரா -  தராத .
      கூய்  -  கூவி . 

3     நலம்பிதற்றல் - தன்னைத் தான் புகzந்து கொள்ளல்.  
      நாணுத்தரும்  -  வெட்கத் தக்கது . 


கருத்துகள் இல்லை: