சனி, 2 ஜூலை, 2016

பெண்களுக் கெதிரான வன்முறைகள்

பெண்களுக் கெதிரான வன்முறைகள்
பேர்குறிப்   பதுவீணே எந்நிலத்தும்
கண்களுக் கெதிர்நேர்வ தென்றபோதும்
கண்டவர் விழிமூடி நின்றுபோகும்
அண்புது  நடப்பேபல் எண்படுமாம்!
ஆழ்கவன் றூர்கண்னீர் சிந்திடவே
மண்புதை கொடுமைகள் கண்டிடிலோ
மன்னுயிர் களும்வாடும் நெஞ்சுநிற்கும்.



Notes:

வன்முறை  -   violence  
எந்நிலத்தும் -   எந்த நாட்டிலும், கண்டத்திலும்
விழிமூடி நின்று போகும் ‍-  கண்னை மூடிக்கொண்டு  நின்றுவிட்டு அங்கிருந்து  அதன்பின் அகலும்.
அண்புது ‍ - அண்மையில் நடந்த புதிய‌
பல் எண்படுமாம்  :  பல எண்ணிக்கையுள் படும்; அல்லது பல‌
எண்ணிக்கையுள் அகப்படும்
ஆழ்கவன்று   -  ஆழ்ந்து கவன்று; ( கவலைப்பட்டு.)
மண்புதை ‍-  மண்ணிற் புதைக்கும்.( நரபலி முதலியவையும். கொல்லப்பட்டுப் பபுதைப்பதும் அடங்கும்)









கருத்துகள் இல்லை: