புதன், 6 ஜூலை, 2016

கங்கையில் முருகன் .

http://sivamaalaa.blogspot.com/2016/07/blog-post_10.html

தொடர்ந்து:


முருகன் ‍  அழகு என்று பொருள்.  எங்கெங்கு காணினும் அழகு. எங்கெங்கு நோக்கினும் அவன் அருள். அவனில்லாத இடமே இல்லை.
அவன் பழனியில் மட்டுமா இருக்கின்றான்.பரந்த உலகெங்கும் உள்ளான்.
கங்கையிலும் இருப்பான், காவிரியிலும் இருப்பான். இப்படிப் பார்த்தால்,
அவன் கங்கைக்கும் உரியவனே. சிவன் வேறு, முருகன் வேறு அல்லனென்று அருணகிரியார் அறைந்திடவில்லையோ  அவர் பாட்டில்?

நெஞ்சக் கன கல்லு எங்கெங்கெல்லாம் நெகிழ்ந்துருகுமோ அங்கெல்லாம்
அவன் இருப்பான்.  அண்ணாமலை அடிகளாரின் கருத்து .

கங்கை > காங்கேயன்.

இப்படி வருதலும் உரித்து. இது தந்திதாந்த நாமம் என்பர். மனு> மானவன் என்பதை விளக்குமிடத்து முன் இடுகையில் தத்திதாந்த நாமம் பற்றி எடுத்துரைத்துள்ளோம்.



கருத்துகள் இல்லை: