செவ்வாய், 5 ஜூலை, 2016

கண்ணயரத் தெம்புவந்ததே!

இலெனோவா என்பதொரு புதுமைஎனப் பொருள்படுமே
இருந்த இடம் வேறிங்கே இணையமதிற் கிட்டவிலை
இயலவிலை எதுசெய்தும் இயைந்தவிழி உறக்கமுடன்
என்செய்வேன் உறங்கிவிட்டேன்!
கலைநாவில் கவிதையொன்று கருதியதும் விரைந்துவரக்
கலைமகளும் அருளவிலை காண்தகவுத் தொலைக்காட்சி
கண்டயர்வு கொண்டபடி கவலைஎன்ன ஒன்றுமிலை
கண்ணயரத் தெம்புவந்ததே!

கருத்துகள் இல்லை: