வெள்ளி, 18 ஜூலை, 2014

மலேசிய வானூர்தி சுடப்பட்டது



விடுதலைக்குப் போராட்டம் நடத்தும் போதும்

வீணாகத் தொடர்பில்லா வழிச்செல் வோரைச்
சுடுகலைஞர் படைகொண்டு சுட்டுத் தள்ளிச் ,
சூழுலகில் மன்பதையும் பதைக்க உள்ளம்
படுகொலைகள் செய்வதுவும் பண்பு தானோ
பறக்கின்ற வானூர்தி தன்னில் யாரும்
இடுவலைக்குள் உற்றதுபோல் இறப்போம் என்றே 
எண்ணியதும் இல்லைதுயர் எழுந்த தன்றே.

நம் இரங்கல்.



பொருள்:
சுடுகலைஞர் --  சுடுவதில் வல்லவர்கள்;   படை -  எறிபடை   (இலக்கணத்தில் இப்படி வருவதை முதற்குறை  என்ப .)  It  is safe in grammar to leave out the first syllable," எறி ."  To shoot an airplane, a long range shooting weapon is obviously required.  சூழுலகில் -  பன்னாடுகளால்  சூழப்பட்ட இவ்வுலகில்;  மன்பதை -  International Community;  (since we are talking about  the world).  இடுவலைக்குள் உற்றது - This shoot occurred in a trapped situation ; the operator of the plane did not expect;  passengers could never  escape; there is no alternative except to perish. The plane was within their "net"  so to speak.  





http://www.thestar.com.my/News/Nation/2014/07/18/mh17-pilots-warned-of-ukraine-russia



MH17 crash: Pilots warned about Ukraine airspace dangers

  
WASHINGTON (Reuters): Aviation safety authorities in the United States and Europe warned pilots in April about potential risks flying in or near Ukraine airspace, where a Malaysian Airlines passenger airliner went down on Thursday.

The US Federal Aviation Administration on April 23 issued a "special notice" regarding Ukrainian airspace to US aviators and air carriers advising them not to fly in airspace around the Crimean city of Simferopol without special approval of the US government.

The notice also warned US operators and pilots flying in other parts of Ukraine, including Kiev, Lvov, Dnepropetrovsk and Odessa, to "exercise extreme caution due to the continuing potential for instability."

The warning remains in effect until April 23, 2015.

International aviation agencies in April also had warned pilots and airlines to avoid the airspace around Simferopol.

Agencies including the European Aviation Safety Agency and ICAO, a United Nations civil aviation agency, warned that airlines faced "serious risks" in the area and advised airlines to take alternate routes.

/

ஆதாயம்.



தாயம் என்ற சொல்லுக்கு பன்னிரண்டுக்கு மேற்பட்ட பொருள் உண்டு. இப்போது ஆதாயம் என்ற சொல்லைக் கவனிப்போம்

இதைப் பிரித்தால், ஆ+தாயம் என்று வரும்.

ஆ = ஆகும் வழி.  ஆதல். நடைபெறுதல். ஆவதென்பது வரவு, போவதென்பது செலவு என்பதும் கொள்க.

தாயம்  ‍ :  தா + அம் ,இவற்றில்  தா :  தருதல். அம் : விகுதி.

பொருள் இலாப மாகின்ற வழி, அதாவது  இலாபம்.  பொருள் ஆக்கம், தன வரவு.

யகரம் ‍ உடம்படு மெய் எனப்படும். சொற்புணர்ச்சிக்கு உதவுவது.

அழகாக அமைந்த  சொல்.




காதல் வேறு, மரியாதை வேறு.

அள்ளூர் நல்முல்லையாரின் இனிய எளிய தமிழால் யாக்கப் பெற்ற சில வரிகளைக் குறுந்தொகை என்னும் சங்கத் தொகை நூலிலிருந்து பாடி மகிழ்வோம்.
அப்பாடல் இது:

நன்னலம் தொலைய நலமிகச் சாஅய்
இன்னுயிர் கழியினும் உரையல்;   அவர் நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி
புலவி அஃது எவனோ அன்பு இலங் கடையே.   63

நன்னலம் தொலைய ‍‍‍=  நமது நாணம் கெடும்படியாக,  நலம் மிகச் சாஅய் = நமது  (இங்கு தலைவியின் ) அழகும் கவர்ச்சியும் பெரிதும் கெட்டுப்பபோய்; இன்னுயிர் கழியினும் =  இனிய உயிர்  பிரிந்தாலும்;  உரையல் = சொல்லாதே;
அவர் நமக்கு அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி =   காதலர் நமக்கு  தாயும் தந்தையும் போன்றவர் என்பதை ஒத்துக்கொள்வோம்  தோழியே; அதற்காக, புலவி அஃது  =  நான் அவருடன் ஊடியிருக்கின்றேன் என்பது;
 எவனோ = எதற்காகப்  பேசவேண்டும்;  அன்பு இலங்  கடையே ‍= அன்பு இல்லாதவரிடத்திலே.

அதாவது:  அவர் நமக்கு (குடும்பத்துக்கு)  அன்னையும் அப்பனும்போல் பக்கத் துணையாய் இருக்கிறார். என்றாலும், என்னை நீங்கி வேறு பெண்ணை நாடிவிட்டார். அன்பு இல்லாமல் போய் விட்டது; அவரால் என் அழகும் உடல் நலமும் ஒழிந்தது. இப்போது வெட்கம் கெட்டதனமாக, நீ ஏன் நான் கோபித்துக்கொண்டிருக்கிறேன்  என்று போய்ச் சொல்லவேண்டும். அன்பு போனபின், கோபம் ஒரு பொருட்டா? பயனில்லை; தோழி, அவரிடம்
அப்படிப் பேசுதல் தவிர்ப்பாய்.

இதுதான் இப்பாடலில் தோழிக்குத் தலைவி சொல்வது.

அந்த வேறொரு பெண் பரத்தை போலும்.

அன்னையும் அப்பனும் போன்றவர் என்றால், அதற்குள்ள பணிவன்புடன் நடந்துகொள்வோம். வழிபடுவோம்!  அன்பு இல்லாதவர், அவரிடம் தணிவு செய்துகொண்டு பழைய காதலுறவைப் புதுப்பிக்க வேண்டியதில்லை.  காதல் வேறு,  மரியாதை வேறு. என்கிறாள் தலைவி.

அருமையான கருத்து.

குறளும் இதையே கூறும்.

காதல் ஒழியினும் ஓர்  ஆடவனுக்குப் பெண் காட்டும் பணிவு தொடரும்.  தலைவி  அறிவுடையவள்.

வியாழன், 17 ஜூலை, 2014

பல்லியின் முன்மை pre-eminence

பல்லியின்  முன்மை   பாரத மக்கள் பின்பற்றும் பல்லி  சொல்பலன்,  பல்லி விழுபலன் முதலியவற்றால் நன்கு புலப்படுகின்றது.

ஐயப்பாடு உடையவர்களுக்கு,  இதை எப்படிக் கண்டறிந்தனர் என்பதே பெரிய  கேள்விக் குறியாய் உள்ளது.  இவர்களுக்கே இது கவலையாய் உள்ளதே யன்றி,  அதைப் பார்ப்பவர்களுக்கு  அன்று எனலாம் .

தலையில் விழுந்தால் கலகம்
குடுமி -  உடல் நலம்;
முகம் -  உறவினர் காணல்
நெற்றி -  இலக்குமிகரம்;
வலக்கண்  --  இனிது முடிதல்
இடக்கண் - கட்டுபடுதல்
மூக்கு - நோய்
வாய் - பயம்
கீழ் உதடு  - பொருள் வரவு
மேவாய் -  அரசு தண்டனை;
வலக்காது - தீர்க்க ஆயுள்
இடக்காது - வியாபாரம்
கழுத்து -  பகைவர்  அழிவு
வலத் தோள் -  வெற்றி
வலது  மணிக்கட்டு - பீடை


இடது மணிக்கட்டு - கீர்த்தி,
வலக்கை பெருமரணம்,
இடக்கை - மரணம்
வலக்கை விரல்  அரசு தரும்  கொடை/பரிசு
இடக்கை விரல்  - நட்புறவில் கவலை
மார்பு -  தன வரவு
நெஞ்சு -  நன்மை
முதுகு - திரவிய அழிவு
தொடைகள் -  பெற்றொர் விருப்பம் நடத்தல்
கணுக்கால் -  சுற்றுலா
வலப்பாதம் -  நோய்
இடபாதம் - துக்கம்
தேகத்தில் ஓடல் =  நிறை ஆயுள்.

;இவையெல்லாம் பட்டறிவினாலோ  பல நேர்காணல்கள் மூலமாகவோ, அரசர்கள்  காலத்தில் திரட்டப்படிருக்கவேண்டும் . இவற்றை வைத்து  நிமித்திகர்கள்  தெரிவிப்புகள் செய்திருக்கவேண்டும்.  கல் வெட்டுகளிலும் தேடிப்பார்க்க வேண்டும்.  சிலர் கணியக் கலையில் (astrology)  முனைவர்ப் பட்டம் பெற்றிருப்பதால் அவர்களிடம்  எதிர்பார்க்கலாம். அல்லது இதன் வரலாறு அறிந்து முனைவர்ப்  பட்டம் பெற   மணவர்கள் முனையலாம்.




  

புதன், 16 ஜூலை, 2014

WANT TO RISE TO THE LEVEL OF GOD?



The moral argument that the context of things is adapted to the soul of man and shows the workmanship of a benevolent God is quite unsatisfactory.  However the matter be turned, in the real world, the responsibility for sin and evil falls on God.   If to relieve him of the authorship of evil we accept something like the mythology of Persia and make Satan responsible for it, then the oneness of God disappears and we reinstate the dualism between God and Satan. Again,  if the soul is part of God, God must feel the pain of the soul also, even as when one member of the body suffers,the whole body suffers with it.  If follows that the suffering of God are much greater than those of the individual souls and it is better for us to remain self-enclosed individuals with our limited sufferings than rise to the level of God and take upon ourselves the burden of the whole world.

Dr  S  Radhakrishnan , INDIAN PHILOSOPHY, II  P 544

பல்லே இல்லாத பல்லிக்கு...........

இந்த இடுகையின் ஆய்வுப் பொருள் பல்லி  என்ற சிற்றுயிரி ஆகும்.

பல்லே இல்லாத பல்லிக்கு எப்படிப் பல்லி  என்று பெயரிட்டனர்?

பன்றிக்கு நல்லபடியாகப் பெயர் அமைந்துவிட்டது. பன்றிக்கு வெளியில் நீட்டிக் கொண்டிருக்கும் பல்லின் காரணமாக  பல் + தி  =  பன்றி என்று பெயர் .  பல் +தி என்பது "பற்றி" என்று வல்லெழுத்து வராமல், பன்றி என்று மெல்லேழுத்தில் போட்டது தமிழனின் சொல்லமைப்புத் திறன் எனில் அது மிகையன்று. சில வேளைகளில் இதற்கு நேர்மாறான உத்தி பின்பற்றப்படும். கன்று + ஆ  = கற்றா என்பது காண்க.

எது இனிமையோ அதுவே அமைக்கப்படும்.

மீண்டும் பல்லியிடம் வருவோம்.

இந்தச் சொல் முன்னாளில் "பல்லிலி "  என்று இருந்தது தெளிவு.  பல் இல்லாதது என்பது பொருள்.  நாளடைவில் அது ஒரு லிகரத்தை இழந்து, பல்லி  ஆயிற்று. "லிலி " என்று முடிவது, வாயொலிக்க   நன்றாக இல்லை.

இரட்டித்த இரண்டு  "லி" யில்  ஒன்று மறைந்தது போலவே வேறு சில சொற்களிலும் நிகழ்ந்துள்ளது .  ஒன்று எடுத்துக்காட்டுவோம்:

ஆதன் + தந்தையார் =  ஆதந்தந்தையர் >  ஆந்தையார்.

இங்கு "தந்தந்" என்று இரட்டித்த இரண்டில்  " தந்த" மறைந்துவிட்டது.

அறிஞர் சிலர் வேறு விதமாகக் கூறியிருந்தபோதும்  இதுவே சரியான முடிவாகும்.

பல்லி பற்றிய சில விடயங்களை அடுதது வரும் இடுகைகள்  ஒன்றில் காண்போம்.

--------------------------------

சண்முகத்தாய்  >  சம்முத்தாய் > சுமுத்தாய் ;
Cited for interest.

வைகுதல் வைகுண்டம்

வைகுண்டம் என்பது  ஓர்  இனிய சொல். இது இறைவன் உறைவிடம் என்று  பொருள் படும். சிவ பெருமானுக்கு கைலாயம் இருப்பதுபோல் விண்ணனாய
பெருமானுக்கு வைகுண்டம் உறைவிடம் எனப்படும்.

வைகுண்டம் என்பது எப்படி அமைந்தது என்று காணலாம்

வைகுதல் என்பது வசித்தல் ,  வாழ்தல் . தங்குதல் என்று பொருள்தரும் .

உண் என்ற சொல் பல பொருள் தருசொல்.  உண் என்பதற்கு  ஒத்துப்போகின்ற,   இசைவான,  பொருந்திவருகிற என்றும் இச்சொல் அமைப்பில் பொருள் கூறலாம்.(1)  (2)

தம் என்பது ஒரு விகுதி. இது து மற்றும் அம்  என்பவற்றின் சேர்க்கை.

வைகு + உண் + தம் = வைகுண்டம்     இறைவனார் தங்குதற்குரிய இடம் என்பது சொல்லமைப்புப் பொருள். ,  சொல் வழக்கில் பொருளும் அதுபற்றிய சிந்தனைகளும் விரிந்து,  புதிய வரையறவு  பெறுதல் தேவைக்கு ஏற்ப ஆகும்.

இச்சொல் ஒரு காரணப்  பெயர்.

இனி இது வைகுந்தம் என்றும் மெலியும்    கடின ஒலிகளாகிய  "ண்ட " மாறி,  மெல்லெழுத்துகள் பெறும்.


=============================================================

1. to harmonise with, to be agreeable to

2 உண் என்பதன் அடிச்சொல்  உள் என்பதுதான்.  இதைப்   பின்  ஓர்  இடுகையில் விளக்குவோம்.

செவ்வாய், 15 ஜூலை, 2014

இலாயம் (குதிரை தங்கிடம்)


மனிதனுக்கு வீடு இருப்பதைப்போலவே,   அஃறிணையாகிய பிற அணிகளுக்கும் (பிற அணி = பிராணி(கட்கும்)) தங்கும் இடம் அல்லது தங்கிடம் உள்ளது. வீட்டு விலங்குகட்கு பெரும்பாலும் இதை மனிதனே கட்டிக்கொடுக்கிறான். மாட்டுக்கொட்டகை, இலாயம், நாயுறைவு முதலியவை உதாரணங்கள்.

இப்போது இலாயம் எப்படி அமைந்த தென்பது காண்போம்.


ஆயம் என்ற சொல்லுக்குப் பல பொருள். இங்கு அதன் பொருள் வேறு.

இல் + ஆய + அம்.

அதாவது இல்லமாக ஆவது என்று பொருள்.

இந்தச் சொல்லில் பெயரெச்சம் இடைபடு சொல்லாய் நின்றது.  (ஆண்டு+ இ = ஆண்டி என்பதில் வினை எச்சம் கொண்டு சொல் அமைந்தது ).

எச்சவினைகளிலிருந்து  சொல் அமைதல் காட்டுவர் சமஸ்கிருத ஆய்வாளர். ஆங்குக் காண்க.

திங்கள், 14 ஜூலை, 2014

சிவனாரின் இருப்பிடமே

கைலாசம் சிவனாரின் இருப்பிடமே ‍‍--- அது
சீனத்தின்  அரசின்கைப் பொறுப்பிடமே!---எந்த‌
நாட்டவர்க்கும் இறைவன் நம் சிவனாரே, ---அவர்
சீனாவுள் குந்தினதால் முனிவாரோ?

பாதுகாப்புக் குறைவான பாரதமோ--- விட்டுப்
பறந்துவிட்டார் சீனரிடம்  சீரிதமே!‍ --- இடர்
ஏதுமின்றி இருக்கின்றார் சீனரிடம் ‍‍---நின்றே
இரங்கிடுவார் பத்தியில்லாக் கூனரிடம்.

எங்கிருந்தால் என்னவெங்கள் சிவனாரே---- ‍‍அவர்
எங்களுக்கே எந்த நாளும்  பரிவாரே
அங்கிங்கே எனாதபடி உறைவாரே----  இன்பம்
ஆதலினால் யாவருக்கும் தருவாரே.

"ஆயுதம்"

இப்பொழுது "ஆயுதம்" என்ற சொல்லினை ஆராய்வோம்.  இதைப் பிரித்தால்
ஆய்+ உது +அம் என்று வரும்.

ஆய்தல் என்பது, பல பொருளுடைய சொல்.  நூல் ஆய்தல், ஒரு பொருளைப் பிரித்தும் சேர்த்தும் வேண்டியவாறு உட்புகுந்து அறியவும் உணரவும் முற்படுதல், ஆராய்தல், காய்கறி முதலியவற்றை வெட்டிச்  சமையலுக்கு ஏற்றபடி சரிசெய்தல்  என்பன நீங்கள் அறிந்தவையே.  ஆய்வது, மனத்தால் ‍ மூளையால் அல்லது உரிய கருவிகளால் நடைபெறுவது.

உது என்பது, முன் நிற்பது என்னும் பொருளது. அது, இது, உது என்பன சுட்டடியாகப் பிறந்த சொற்கள். சுட்டு எழுத்துக்களாவன, அ, இ,உ  என்பன.
து என்பது  அஃறிணை ஒன்றன்பால் விகுதி.  சொல்லாக்கத்தில், அது, இது உது என்பன பல சொற்களில் பயன்பட்டுள்ளன.  எ டு:  பரு+ அது + அம் = பருவதம்.(மலை ) இங்கு அது பயன்பட்டுள்ளது.   பருத்தல்  = "பெரிதாதல்."(1)  காயிதம் என்பதில் காய்+இது + அம் என இது வந்துள்ளது.  காகிதம் என்பது காயிதம் என்பதன் திரிபு. இது பற்றி முன் இடுகைகளில் விளக்கியுள்ளேன்.

அம் ‍ விகுதி.

ஆயுதம் என்பது, பொருளை ஆய்வதற்கு ( வெட்டுவதற்குப்) பயன்படும் கருவி. இதுவே அதன் அமைப்புப் பொருள். சொல் அமைந்தபின் பொருள் ஏற்றவாறு விரிவுபடும். இது இயல்பாகும். இப்போது இது weapon, என்ற பொருளில் வழங்குவது  பெரும்பான்மை.


குறிப்பு 

பரிய  -  பெரிய .  இவற்றுக்குள்  நுண்பொருள் வேறுபாடு உண்டு .  பருவதம் -   பரியதாகிய மலை .

காயிதம்  -  அடிச்சொல்  "காய்தல் ".  அரைத்த மரக்குழம்பு  காயவைத்து  காயிதம் ஆகிறது.

ஞாயிறு, 13 ஜூலை, 2014

சகுனம்.

மனிதனுக்கு மரணம் என்று ஒன்றில்லா திருந்திருப்பின்,  பிணம் தூக்குவோர், புதைப்போர், எரிப்போர் எல்லாம் தோன்றியிருக்க மாட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அது மட்டுமா? மதங்கள், சாத்திரங்கள், சோதிடம், சகுனம் என்று பலவும் தோன்றியிருக்க மாட்டா என்பது மாந்தவளர்ச்சி நூலார் (anthropologist)  நமக்கு அறிவுறுத்திய உண்மையாகும்.

நன்மையே என்றும் வேண்டும். தீமையே நமை அண்டுதல் கூடாது, சாவு தீமை; நோய் தீமை, இன்னும் எத்தனை எத்தனையோ! அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ, பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ, இன்னும் எத்தனை எத்தனை சென்மமோ என்பதுபோன்ற பட்டினத்தடிகளின் பாடல், மரணம் இல்லையென்றால், பாடப்பெற்றிருக்க முடியாதல்லவா?

ஆமாம். இப்போது சகுனம் என்ற சொல்லைப் பார்க்கலாம்,

தோழி ஒருத்தி இறந்துவிட்டால், அவள் போய்விட்டாள் என்பது ஒரு கவலை; இனி வரமாட்டாள் என்பது இன்னொரு கவலை; எனக்கும் இப்படி நேருமோ என்பது இனியும் ஒரு கவலை; எப்போது அது வருமென்பது மேலும் ஒரு கவலை; நடப்பிலேயே அதை அறிந்துகொள்ள வழியுளதா என்பது அடுத்து நிற்கும் க்வலை. எங்கேயாவது ஒரு பல்லி கில்லி சொல்லாதா என்பது தொடர்ந்து வரும் கவலை.  பல்லி சொல்லிவிட்டது, எனக்கு விளங்க வில்லை, யாராவது தெரிந்தவர்கள் சொல்ல மாட்டார்களா என்பது அதை ஒட்டிவரும் கவலை.

சாவு+அன்+அம் > ( சாவனம் ) > சவனம் > சவுனம் > சகுனம்.1

சாவனம் என்ற இடைவடிவம் ஒழிந்தது. சா என்பது ச என்று குறுகிவிட்டது. மேலும் அறிய, முன் வந்த சவம் என்ற இடுகையைப் படித்தறியுங்கள்.
சாவனம் மட்டுமின்றி, மக்கள் நாவில் இன்றும் தவழும் ஏனை வடிவங்களும் மேலே தரப்பட்டுள்ளன.

சவனம் சகுனம் என்ற சொற்கள் ‍  எந்த மொழிக்காரர்கள் வேண்டுமானாலும்
எடுத்துக்கொள்ளட்டுமே. உலக சேவையில் அது இருக்கட்டும்.

சாவைப் பற்றி மட்டும் சொன்ன பல்லி, இப்போது முன்னேறி குதிரைப் பந்தயம், எண் பந்தயம் என்றெல்லாம் அறிந்து சொல்லத் தொடங்கிவிட்டபடியால், சாவு என்று தொடங்கிய சொல், சவத்துப்போய் சகரக் குறுக்கம் பெற்று சவனம் > சகுனம் என்றானது, வேண்டியதொரு மாற்றமே.
போராட்டம் இல்லாமலே கிட்டிய பரிசல்லவா இந்தத் திரிபு!


notes:

சிலர் சகுணம்  என்று எழுதுகின்றனர். Publication (2002) by Rajan Bndgs  12 Barracks Rd, Seven Wells, Chennai, 600 001  

சனி, 12 ஜூலை, 2014

சவம்.

சில சொற்கள் வினைச்சொல் வடிவிலிருந்து பெயர்ச்சொல் வடிவத்தை அடையும்போது, முதனிலை அதாவது சொல்லின் முதலெழுத்து நீண்டு பெயர்வடிவம் பெறுகின்றன. இதற்கு  எடுத்துக்காட்டு:‍

சுடு  >  சூடு
அசை >  ஆசை  (ஒன்றை நோக்கி மனம் அசைவுறல்).

இப்படி நீண்டபின், விகுதி பெறுவனவும் உண்டு:    எ‍-டு:

படி >  பாடம்.  (அதாவது: ப என்பது பா என நீள, அம் விகுதி பெற்றது.)

இதில், இன்னொன்று, படி என்பதில் இறுதியில் நின்ற இகரம் கெட்டு ட் என்றானது.

படி  >  பாட் > பாடம்.  பட்,  பாட் என்பன தோன்றா இடை வடிவங்கள்.

கருவில் வளர் குழந்தை, பல் வேறு இடை வடிவங்களை அடைந்து, பின் இறுதிக் குழந்தை வடிவம் அடைதற்கும் இதற்கும் வேறுபாடில்லை.

நான் சொல்ல வந்தது இதுவன்று. அதை இப்போது காண்போம்,

சில சொற்கள் சூடு எனற்பாலது நீண்டாற்போன்று நீளாமல், குறுகிவிடுகின்றன.

இதற்கு ஓர் எடுத்துக்காட்டு:

சாவு >  சவம்.

சாவு என்ற வினைச்சொல்லின் முதலெழுத்து, "ச" என்று குறுகிற்று. "வு" என்ற இறுதி எழுத்து தன் இறுதியில் நின்ற உகரம் இழந்தது. வ்  என்று மட்டும் நின்றது, பின் வந்த அம் விகுதி  "வ்" என்ற எழுத்துடன் புணர்ந்து, "வம்" என்றானது. முன்பே குறுகிவிட்ட "ச" எழுத்துடன் இணைந்து, சவம் என்றானது.

இது போன்று குறுகி அமைந்த சொற்களின்  பட்டியல் ஒன்றை நீங்கள் தயார் செய்யலாமே.

ஆகாரம்

இது வெறுமனே  உணவு என்று மட்டும் பொருள்தரும் சொல் அன்று.
இதை உணர்ந்து கொள்ள வேண்டின்  ஆகு+ ஆரம் என்று பிரிக்கவேண்டும்.

ஆர்தல் என்பது உண்ணுதல் என்று பொருள்படும் .(வேறு பொருள்களும் உண்டு எனினும்  அவை இங்கு எழவில்லை.)

ஆர்+அம் =  ஆரம் .  = உணவு.

முன்  நிற்கும்  சொல்   ஆகு.  அதாவது ஆகுதல்.

உணவுக்கு ஆவது ஆகாரம். அதாவது   சாப்பிடக் கூடியது.

Not your regular food, but something that can be eaten in place of or as a supplementary food. Now the word is used only as referring to substitute or additional  food.  titbits.  The word "palam" has lost its meaning.
paza + AkAram  - pazakAram.
 > palakAram.

பழ(ம்) + ஆகாரம் = பழாகாரம்  > பலகாரம்.*

பழம் >  பலம்

இந்தச் சொல் சமஸ்கிருதத்திலும் சென்றுள்ளது.

ஊர்ப்பெயர் :ழ   > ல

(மாம்பழம் )> மாம்பலம்.

Some have tried interpreting as பல  +  காரம்.   பல  many ;   kAram as hot stuff.



----------------------------------------------------------------------------------------------------------------
* மறைமலையடிகள் 

வெள்ளி, 11 ஜூலை, 2014

காதற் கனவு



யாரேனும் வேண்டியவர்கள் வீட்டுக்கு வந்துவிட்டால் அப்போதுதான் நம் சமையல் திறனை வெளிப்படுத்திக்கொள்ள ஓர் அரிய வாய்ப்புக் கிட்டியது என்று சொல்லலாம். சுவையாக ஆக்கிப் பரிமாறி இன்புறலாம்.

வந்தது நல்ல கனாவாக இருந்தாலும் இதே முறையைப் பின்பற்றலாம். நம் இதயத்துக்கு கனியைப் படைத்து மகிழலாம்.  கொஞ்சம் பைத்தியம் வந்துவிட்டால் வாழ்வே சுவையாக மாறிவிடுகிறது.

தெய்வப் புலமைத்  திருவள்ளுவ நாயனாருக்கும் இத்தகு விருந்துகள் இயல்பானவையாகவே தோன்றியிருக்க வேண்டும். இல்லையென்றால் அவர் பாட்டுடைத் தலைவி, தான் கண்ட இன்பக் கனாவுக்கு விருந்து வைக்க முற்படுதல்  கூடுமோ?

கனவில் காதலன் தூது விடுகின்றான். விழித்து எழுந்தவள், தனியே மஞ்சத்தில் இனிய கனவினால் உறக்கம் கலைக்கப்பெற்று, அதனை எண்ணி, இதற்கு என்ன விருந்து வைப்பேனோ வென்று சிந்தனைச் சுழலில் சிக்கிக்கொள்கிறாள். அதுதான் உண்மைக் காதலும் வள்ளுவனார் தந்த இலக்கியக் காதலும் ஆகும்.
அதை இப்போது கண்டு மகிழ்வோம்,

காதலர் தூதொடு  வந்த கனவினுக்கு
யாது  செய்வேன்கொல் விருந்து.

ஈராயிரம் ஆண்டுகட்கு முன் பாடப்பெற்ற பாடல், உரை தேவையில்லாத அளவுக்கு இன்னும் தெளி நீராய் உள்ளது.

காதற் கனவு


-----------------------------------------



நல்ல கனவுக்கு விருந்து வைக்கவேண்டும்.

யாரேனும் வேண்டியவர்கள் வீட்டுக்கு வந்துவிட்டால் அப்போதுதான் நம் சமையல் திறனை வெளிப்படுத்திக்கொள்ள ஓர் அரிய வாய்ப்புக் கிட்டியது என்று சொல்லலாம். சுவையாக ஆக்கிப் பரிமாறி இன்புறலாம்.

வந்தது நல்ல கனாவாக இருந்தாலும் இதே முறையைப் பின்பற்றலாம். நம் இதயத்துக்கு கனியைப் படைத்து மகிழலாம்.  கொஞ்சம் பைத்தியம் வந்துவிட்டால் வாழ்வே சுவையாக மாறிவிடுகிறது.

தெய்வப் புலமைத்  திருவள்ளுவ நாயனாருக்கும் இத்தகு விருந்துகள் இயல்பானவையாகவே தோன்றியிருக்க வேண்டும். இல்லையென்றால் அவர் பாட்டுடைத் தலைவி, தான் கண்ட இன்பக் கனாவுக்கு விருந்து வைக்க முற்படுதல்  கூடுமோ?

கனவில் காதலன் தூது விடுகின்றான். விழித்து எழுந்தவள், தனியே மஞ்சத்தில் இனிய கனவினால் உறக்கம் கலைக்கப்பெற்று, அதனை எண்ணி, இதற்கு என்ன விருந்து வைப்பேனோ வென்று சிந்தனைச் சுழலில் சிக்கிக்கொள்கிறாள். அதுதான் உண்மைக் காதலும் வள்ளுவனார் தந்த இலக்கியக் காதலும் ஆகும்.
அதை இப்போது கண்டு மகிழ்வோம்,

காதலர் தூதொடு  வந்த கனவினுக்கு
யாது  செய்வேன்கொல் விருந்து.

ஈராயிரம் ஆண்டுகட்கு முன் பாடப்பெற்ற பாடல், உரை தேவையில்லாத அளவுக்கு இன்னும் தெளி நீராய் உள்ளது.

(இதை நான் வெண்பா அசைசீர் பிரித்து எழுதவில்லை. வேண்டின் நீங்களே வகையுளி செய்துகொள்ளுங்கள்.  குற்றிகர இலக்கணம் இப்போது வேண்டாம்

வியாழன், 10 ஜூலை, 2014

Our yesterdays Shakespeare translation. from Macbeth.

WILLIAM SHAKESPEARE (Macbeth V.v.)

மொழி பெயர்ப்பு :

(  இணைக் குறள் ஆசிரியப்பா )

நம் நெருந‌ல்கள் யாவும்
தீவட்டி  வெளிச்சத்தில் தெரியும்
கோமாளி மூடர் தம்மைக் கொண்டவை.
புழுதி மூடிய சாவுக்கு வழியே.
மெழுகுக் குறுந்திரியே! அணைந்திடு!
நிழல் நட  மாட்டமே வாழ்வு!
நிமிர்ந்தும் குனிந்தும் திரும்பியும் இசையோடு
இயைந்தும் தன்மணிக்கூ றொழித்துத்தொலையும்
நிலையா ஆடகத் தரமில் பாடகன்!
முட்டாள் வாயிற் கொட்டுபொய்ச் செல்கதை.
ஆங்காரம் ஓசை கூடினும்,
அவையே குறித்தவை அனைத்தும் வெறுமையே.

 நெருநல்கள்   yesterdays
புழுதி மூடிய -  dusty,
மெழுகுக் குறுந்திரி   brief candle
மணிக்கூறு  =  hour
ஆடகம் -  stage
செல்கதை  -  tale;

வசந்தம்

இது வயப்படுத்துவதை உடைய அழகு,/ காலம் என்று பொருள்படும்.

ஒன்றை வயப்  படுத்துவதாவது, தன்பக்கம் ஒன்றை ஈர்த்துக் கொள்ளுவது . அப்படி ஈர்த்துக்கொண்ட பொருளைத் தன்பால் வைத்துக்கொள்வது.

இதன் அடிச் சொல் வை என்பதுதான்.

வை>  வய் >  வயம் .

ஒப்பீடு:

பை  > பய்  >  பயல் .
பை  > பையன்.

இத்  திரிபுகள் முன் விளக்கப்   பட்டன.  Pl see தைவருதல், தை மாதம் etc.

வயம்  > வசம் > வசம் +தம்  >  வசந்தம் . (ய>ச  common change).

தம் - விகுதி.   "தம் வசம் " என வாக்கியப் படுத்துதலுமாம்.

வயந்தமாலை என்பது மணிமேகலைக் காப்பியத்தில் ஒரு பாத்திரத்தின் பெயர்.

(இதை முன் ஒரு இணைய தளத்தில் எழுதியுள்ளேம்.)

தன்வீடு போல்

எங்கெங்கு நாமுலாச் சென்ற போதும்
இல்லத்தே மீளுமந்த ஒனறு போதும்!
அங்கங்கு தண்துயில உண்டு  லாவ
ஆம்ந‌ன்மை வைத்தழகு போற்றி னாலும்

பொங்குள்ளம் பூரிப்ப தில்லம் தன்னில்!
பூக்கின்ற தாய்ச்செடியில் பொன்னாம் பூக்கள்.
தங்குங்கள் விண்ணளாவு பன்மா டத்தில்
தன்வீடு போல்வருவ தில்லை காண்பீர்.



தண் துயில -  குளிர்வசதி உள்ள  அறையில் துயில (.உறங்க) 
ஆம்  -  ஆகும் , பொருந்தும் .  நன்மை  -  வசதிகள் 
பொங்குள்ளம் --  உலா தொடங்கும்போது மகிழ்வு பொங்கும் உள்ளம்.
பூரிப்ப(து) -  வீடு வந்ததும் பூரிப்பது. 

சனி, 5 ஜூலை, 2014

யகர ககர பரிமாற்ற.....

இப்போது யகர ககர பரிமாற்றத் திரிபுகளைச் சற்று சிந்திப்போம்.

தேகம் என்ற முன் இடுகையில், அதன் முந்திய வடிவம் "தேயம்" என்பது கூறப்பட்டது  இதன் தொடர்பில் யகர ககரத் திரிபுபற்றி அறிதல் நலம்.

அதிகமான் என்ற அரசர் பெயர், அதியமான் என்றும் எழுதலாம். ய ‍> க ஒன்றுக்கு மற்றொன்று இடம்கொள்ளும்.

நாயர் என்று இன்று வழங்கும் சாதிப்பெயர், நாகர் என்பதினின்று வந்தது என்று
ஆய்வாளர் சிலர் கூறியுள்ளனர்.1 இதற்கு அவர்கள் கூறும் காரணம், நாயரென்போர் முன் நாகவணக்கம் உடையோராய் இருந்தனர் என்பதுதான். அதாவது நாகவணக்கம் பொதுவாகவும் பரவலாகவும் இருந்ததா,  அல்லது இவர்கள் மட்டுமே  நாகவணக்கம் செய்துவந்தனரா என்பது தெரியவில்லை. சோழனொருவன் அழகிய நாகக் கன்னிகையை மணந்தபின், நாகர்கள் குமுகத்தில் ஒப்புதல் பெற்று அவர்கள்பால் ஏனை மக்கட்கு நட்புறவு மலர்ந்தது என்பதும் கூறப்படுகிறது. மணிமேகலைக் காப்பியம், நாகரை நக்கசாரணர் என்கிறது. அவர்கள் ஒரு மலையில் வாழ்ந்தனர், சாதுவனைக்  கொன்று கள்ளுடன் உண்ண முனைந்தனர் என்கிறது.

நாயர் என்பது நயத்தல் என்பதின் அடியாகப் பிறந்த பெயர் என்பது மற்றோர் ஆய்வு சொல்வதாகும்.2

நாயனார், நாய்க்கர், நாயுடு என்பதெல்லாம் என்ன என்பதை, நாயர் ‍ நாகர் ஆய்வுரை மூலம்  அறிதல் அரிது.3

இது எங்ஙனமாயினும்,  நாயர் ‍  நாகர் திரிபில் ய >க,  க>ய பரிமாற்றம் உண்டென்று அறிஞர்கள் கருதியது அறியலாம்.

காயிதம் என்பது காகிதம் என்றும் திரியும். இதிலும் ய க திரிபு காணப்படுகிறது.
மரக் குழம்பை அரைத்துக் காயவைத்துச் செய்யப்படுவதால் "காய் (தல்)" என்ற சொல்லினடிப்  பிறந்ததே காயிதம். (காய்+இது+அம் )
  அது பின் காகிதம் ஆனதால், காயிதம் என்பதே முந்துவடிவம் ஆகும்.


நேயம் என்பது "ஸ்" தலைபெற்று, யகரம் ககரமாதல் காணலாம்.  நேயம் > சி  நேகம்.

நிமித்தியம் > நிமித்திகம்   ய >  க

கன்னியை (கன்யா) >  .கன்னிகை   ய  > க


-------------------------------------------------------------------------------------------------------------

குறிப்புகள்:

1 பேராசிரியர் கணபதிப்பிள்ளை, (இலங்கை).  மற்றும் வரலாற்று அறிஞர்  எம் . சீனிவாச  .ஐயங்கார் .

2. அறிஞர்  தேவநேயப்பாவாணர்.

3 Per Jaffna author and historian  Kanagasabaip Pillai, Nagas were yellow-skinned people of Mongoloid race (as in Indian State of Nagaland today). Some deny this.  (See Tamils 1800 Years Ago )

வெள்ளி, 4 ஜூலை, 2014

காதுக்கு உகந்த கீதை

முன் இடுகையில்  (கத்) என்ற பிரித்தறி சொல்லினின்று கீதை என்பதும்  ஏனைச்  சொற்கள் சிலவும் உருப்பெற்றன என்பது கண்டோம்.

இப்போது காது என்னும் சொல்லைப் பார்ப்போம்,

கத் என்ற ஒலி குறிக்கும் சொல்லினின்று கத்> காத் > காது என்று வந்திருப்பது மிக்கப் பொருத்தமானதே. அதிலும் இறுதியில் வந்த உகரம் பாருங்கள். ஒலியானது உள் சென்று கேட்பாற்றல் பெறுவது நன்கு தோன்றும்படியாக,  உகரத்தில் முடிகிறது. விகுதியாகவும், அதே சமயத்தில் உட்செலவுப் பொருண்மை தெரியவும் அமைந்துள்ளது.

இதற்காக நாம் பண்டைத் தமிழரைப் பாராட்ட வேண்டும். மொட்டையாக ஒரு விகுதியைப் போடாமல் அதற்கும் ஒரு பொருள்வரச் செய்த பெருமை அவர்களுடையது ஆகும்.

கத் நீண்டு காத் ஆகி காது அமைய,
கத் > கித் ஆகி, அதுவும் நீண்டு ஐ விகுதி பெற்று கீதைச் சொல் அமைய,

கன பொருத்தமன்றோ?

சொற்கள் நீள்வது புதிதன்று.   கண் >< காண்.  வாய் எப்படி நீண்டதென்பது பின்பு சொல்வேன்.


இப்படிச் சொல்லாமல், கத்து >  கது (இடைக்குறை அல்லது தொகுத்தல் போன்றது ) > காது ( முதனிலை நீண்டு பெயரானது ) என்று தமிழிலக்கண மரபு பற்றி உரைப்பது தமிழாசிரியர் விழைவு ஆம்.

கத்திலிருந்து கீதைவரை

சில சொற்கள் நாம் எளிதில் கண்டுகொள்ள இயலாதபடி திரிந்துவிடுவதால்,  உரியவற்றோடு அவற்றைத் தொடர்புறுத்தி அறிந்துகொள்ள,  சிற்சில வேளைகளில் இடர்ப்படுகிறோம். சில சொற்கட்கு தலையில் திரிபு. வேறு சில வாலில் திரிந்துவிடுகின்றன. ஆகவே, ஆசிரியர்களும் அவற்றை வேற்றுமொழிச் சொல் என்று கற்பித்துவிடுகின்றனர்.

கத்து என்ற சொல், (கத்) என்ற அடிச்சொல்லில் இருந்து வருகிறது என்று பாணினி முறையில் வைத்துக்கொண்டால், கதறு என்பது (கத்)> கத்+அ+று என்றும், கதை என்பது (கத்) > கத்+ஐ என்றும் தெரிந்துவிடுகிறது.  கத் என்று ஒரு தனிச்சொல் இல்லையென்றாலும், அதைப் பிரிப்பதால், வேரை ஒருவாறு அறிந்துகொள்ள இயல்வதாகிறது.
நல்ல முறைதான்; ஆனால் தமிழ் ஆய்வாளர்கள் இதைப் பயன்படுத்துவதில்லை.
சங்கதத்தில் இம்முறையே போற்றப்படுகிறது. இம்முறையினால், (கத்) > கதம், ஆகையால் சங்கதம் என்ற சொல்லில் இறுதியில் இது உள்ளது என்று எளிதில் பிடித்துவிடுகிறோம்.

கத் > கித் > கீதை.  மற்றும் கீதம் என்பது சற்று முயன்று கண்டுபிடிக்கவேண்டியுள்ளது. கத் என்றால் ஒலிசெய்தல் என்பது அடிப்படைப் பொருள்.

கத் என்பது குகை மாந்தனின் காலத்தில் இருந்து பின் தொலைந்துவிட்டது. அதன் பின்பிறப்புகள் உள்ளன என்பதை நாம் உணரவேண்டும்.

மேலும் காண்போம் அடுத்த அல்லது வேறு  இடுகையில்.

வியாழன், 3 ஜூலை, 2014

தேகம்

தேகம்  அழிதலை உடையது என்பதில் இந்திய அறிவாளிகள் மிகுந்த கவனம் செலுத்தி வந்துள்ளனர்.தமிழ், சங்கதம் , பிற இந்திய மொழிகள் என எங்கும் இக்கருத்து பரவிக் கிடக்கிறது. நரை  திரை   பிணி,மூப்பு  என்பது யாவரும் அறிந்த கருத்தாகும். தேகமானது தேய்தலைத்  தன்  உடைமையாய்க் கொண்டுள்ளது.

இதனால்  தேய் என்ற சொல்லினின்று ஒரு சொல் படைக்கப்பெற்றது.(ஷேக்ஸ்பியரின்  கவித் துணுக்கு ஒன்று  கீழே தரப்பட்டுள்ளது . அதிலும் இக்கருத்தைக் காணலாம்.  இஃது ஓர் உலகக் கருத்தென்பதில் யாரும் வேறுபடார் .)

தேய் >  தேயம் .

தேய் என்பதினின்று அமைந்த தேயம் என்ற உடம்பு குறிக்கும் சொல் வேறு.
தேஎம் >  தேயம் > தேசம் என்று திரிந்த நாடு குறிக்கும் சொல் வேறு. இவை வேறு வேறு வீட்டுப் பிள்ளைகள்.   குழம்பாமல் இருங்கள்..

தேயம் (உடம்பு)  என்பது பின் தேகம் என்று திரிந்தது. இது பிற மொழிகளிலும் சென்று வழங்கியது.

தேகம் என்பது     அழிவுக் கருத்தினடிப்படையில், ஞானத்தில்1 எழுந்த சொல் ஆகையால், தொடக்கத்தில் தமிழ் இலக்கியங்களில் இடம் பிடித்துக்கொள்ள முடியாமல் இருந்தது என்பது தெளிவு.  கெடுகுறிச் சொல் (அபசகுனம் ) என்ற நினைப்பு. சங்க இலக்கியங்களில் உளதா? இல்லையெனில் அல்லது அருகியே வழங்கிற்று எனில், இக்கருத்து சரியானதே. பேச்சு வழக்கில் இருந்தது.

ஆனால் தேய் என்ற அடிச்சொல் இல்லாத மொழிகளில் இக்கருத்துத் தடை, மனத்தயக்கம் இல்லை. இப்போது தமிழிலும் இம் மனத்தயக்கம் இலது

இச்சொல் இருக்கு வேதத்திலும் வந்துள்ளது என்றாலும் அங்கு  இணைப்புச் சொல்லுடன் உடற்பூச்சு, கரை, சுற்றுச்சுவர் முதலிய பொருளிலும் விளங்குகின்றது. தேகதி: f. mound , bank , rampart , surrounding wall RV.   ஏனை இணைப்புகளும் உள்ளன. இங்கு சுட்டிக்காட்ட விரும்புவது, உடற்பூச்சு முதலியவை, உடலில் தேய்க்கப்படுபவை. இஃது தமிழ் அடிச்சொல்லுடன் ஒத்துப்போவதாகும்..

மரணத்தைப் பற்றி மகாகவி ஷேக்ஸ்பியர்:

......................
And All our yesterdays have lighted fools:
The way to dusty death;  Out, out brief candle;
Life's but a walking shadow; a poor player
That struts and frets his hour upon the stage;
And then is heard no more; it is a tale
Told by an idiot, full of sound and fury,
Signifying nothing.

WILLIAM SHAKESPEARE (Macbeth V.v.)

இராமலிங்க  அடிகளாரின்  பாடலில் "

"பெற்ற தாய்தனை  மக  மறந்தாலும் 
பிள்ளையைப் பெறும்  தாய்  மறந்தாலும் 
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் ...."

என்று  வரும்  வரிகளையும்  நோக்குக.    தேகம்  உயிரை இழப்பது   ஈ டற்ற  ஒரு  பெரு   
 நிகழ்வே  ஆகும். இங்ஙனம்   தேய்ந்து  அழியும்  உடல்  தேகம்  (தேயம்)  ஆயிற்று.

பொய்  ஆகிய உடலை  எப்படி   மெய்  என்பது?  காற்றடைந்த  பை  அன்றோ?
அதனால்  அதைக்   குறிக்க த்   தேகம்  என்ற சொல்   தேவை   ஆயிற்று.





-----------------------------------------------------------------------------------------------------------

1  ஞானமாவது, ஞானும் கடவுளும் வேறன்று  (வேறல்லோம் ) என்னும் கருத்து, ஞான் ‍> ஞானம்.
ஞான் = நான்,  ஞயம் > நயம் போல. ஞான் மலையாள வழக்குமாம்.

ய  -  க  திரிபு:  நிமித்தியம் >  நிமித்திகம்.

புதன், 2 ஜூலை, 2014

உகாதி --( தெலுங்குப் பண்டிகை)

தெலுங்க்குப் பெண்களுக்கு உகாதிப் பண்டிகையன்று உண்டாகும் மகிழ்வுக்கு  ஓர் எல்லையில்லை. வீட்டு அலங்காரம், புத்துடை அணிதல் , பிரம்மனை  அல்லது இட்ட தெய்வத்தை வழிபடல், பல்வேறு பூசைகள் யாகங்கள் இயற்றுதல் முதலிய செய்தலுடன் உகாதிப் பச்சடியும்  உண்பர். பெரியோர் ஆசியும் பெறுவர்.

இனி உகாதி என்ற சொல்லைப் பார்ப்போம்.

உக + ஆதி=   உகாதி.

உகந்த அனைத்தும் ஆகும் நாள் என்று பொருள்.

உக : உகத்தல்.  ஆ :  ஆதல்.  (ஆகுதல்).

இந்நாளில் நல்லன பலவும் நடைபெற்றதற்கான சான்றுகள்  நிறையவுள்ளன  என்பர்.

யுகாதி எனவும் சொல்வர்.  

தெலுங்குப் பண்டிகை 

அரு x உரு அமைந்த விதம்



உரு என்ற சொல்லினின்றே அரு என்ற உருவின்மை குறிக்கின்ற சொல் அமைந்துள்ளது அறிந்து இன்புறற் பாலதே.

அல் என்ற சொல் அல்லாமையைக் குறிக்கும்.

இச்சொல் கடைக்குறைந்து "அ" என்றாகும். கடைக்குறையாமல் "அல்" என்றே சொல்லில் அமைதலும் காணலாம்.  எ‍-டு:  அல்வழி  (அல்வழி என்பது ஓர் இலக்கணக் குறியீடு).  வேற்றுமைப் புணர்ச்சி, அல்வழிப் புணர்ச்சி என்பன காண்க.

இனி அரு என்பதில்,

அல் + உரு >  அ + உரு >  அரு.

அல் என்பது அ என்று குறைய,
உரு என்பது உகரமாய தலையிழந்து ருகரமாக நிற்க,
"அரு" என்ற அழகிய புதிய சொல் அமைவுறலாயிற்று.


அல்+உரு=  அல்லுரு =  அரு. 

ல் மற்றும் லு இரண்டையும் ஒழித்துக்கட்டிச் 
சொல் உருவானது எனினும் ஆம்,.  இதுவும் இடைக்குறையே.

இப்படிப் பாடுபட்டுத்தான் சொற்களை அமைக்கவேண்டியிருந்தது.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய் 
மருவாய் மலராய் மணியாய்  ஒளியாய் 
கருவாய் உயிராய்க்   கதியாய் விதியாய் 
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே. 

திங்கள், 30 ஜூன், 2014

Real Lover branded as possessed.. (Sangam)

சங்க காலப் புலவர் பெருஞ்ச்சாத்தனார் பாடிய ஓர் அழகிய பாடலைப் பாடிப் பொருளை அறிந்து இதுபோது மகிழ்வோம்.    சங்க இலக்கியச் சுவை கண்டு சின்னாட்கள் கழிந்துவிட்டன.

மறிக்குரல் அறுத்துத் தினைப்பிரப்பு இரீஇச்
செல்லாற்றுக் கவலை பல்லியங் கறங்கத்
தோற்றமல்லது நோய்க்கு மருந்து ஆகா
வேற்றுப் பெருந்தெய்வம் பலவுடன் வாழ்த்திப்
பேஎய்க்  கொளீஇயள் இவளெனப் படுதல்
நோதக்  கன்றே தோழி  மால்வரை
மழை விளையாடு நாடனைப்
பிழையேம் ஆகிய நாம்இதற் படவே .      குறுந் 263.   

அருஞ் சொற்கள்:

மறி = ஆடு . குரல் =  குரல்வளை.  பிரப்பு  =  படையல் பாத்திரம். இரீஇ = படையலிட்டு .  செல்லாற்றுக் கவலை  -   ஆற்று நடுவில் உள்ள திட்டு .
பல்லியம் = பலவகை வாத்தியங்கள்.  கறங்க =  இசைக்க. தோற்றம் =  இங்கு முருகன்,  அல்லது =  அல்லாமல்.;  நோய்க்கு =  காதல் நோய்க்கு ; மருந்து ஆகா:= தீர்வு தரும் மருந்து ஆகமாட்டாது. வேற்றுப் பெருந்தெய்வம் பலவுடன் வாழ்த்தி  = மற்ற தெய்வங்களுக்கு வாழ்த்து , வெறுப்பில்லை ; அவை பலவும் போற்றினோம் என்றபடி .

பேஎய்க்  கொளீஇயள் இவளெனப் படுதல் =  இவளுக்குப் பேய் பிடித்துள்ளது என்று சொல்வதும் நடந்துகொள்வதும் ;  நோ = வருத்தம். தக்கன்று = (அடையத்)  தக்கது .  மால் வரை =  பெரிய மலை இடத்து ;  மழை = மழை (தரும் முகில்கள் ).  நாடன் =  நாடுடையோன்  (அவனை )

பிழையேம் =  மாற மாட்டோம் ; ஆகிய  =  (என்று)  நடப்பில் காட்டிய ; நாம் = (தலைவி தோழி ஆகிய)  நாம்.  இதற் படவே =  இந்தப் பேய் விரட்டில் பங்கு பெறவே .  இதற் படவே = இதன் +படவே ,  இதனில் படவே.

பேய் விரட்டு நிகழ்வுகள் இப்போது சில இடங்களில் இன்னும் நடத்தல் போலவே சங்க காலத்திலும் .நடைபெற்றன . மலை  நாட்டுக் காதலன்பால்  மனம்  பறிகொடுத்த தலைவி முருகப் பெருமானிடம் வேண்டி அக்காதல் நிறைவேறும் நாள் எதிர் பார்த்துக்கொண்டிருந்தாள். அன்னையோ  இக்காதலின் ஆழம் உணராதவளாய்,  தலைவிக்குப் பேய் பிடித்துவிட்டதாக நம்பிக்கொண்டு,  ஆற்று நடுவில் உள்ள திட்டில் பேய் விரட்டுப பூசை போடத் துவங்கி விட்டாள்.
பூசைகளுக்குத்  தேர்வாவன   பெரும்பாலும் பாடலில் வரும்  இதுபோலும் .இடங்களே.  தெய்வங்கள் வாழ்விடம் .இவை என்ப .( சீரங்கம் இத்தகையதே. அரங்கன் அமர்விடம்.)   இந்நிகழ்வால் தலைவியும்  தோழியும் வருந்தினர். எங்ஙனமாயினும் காதலைக் கைவிடாள்  தலைவி.  மழைமுகில்கள் கொஞ்சும் நாடனைப்   "பிழையேம்"  என்கிறாள். பேய் விரட்ட ஒப்புக்கொள்ளவில்லை. இருந்தாலும் பங்கு பெறுதல்போல் நடந்து`கொள்ள வேண்டியதுதான்.

பிரம்பினால் பின்னப்பட்ட பாத்திரத்தில் படையல் செய்தனர் . இது  பிரப்பு   எனப்பட்டது,  பிரம்பு > பிரப்பு .  (வலித்தல் ) தினை  என்பது  ஒரு கூலம்.

முருகன் சிவனின்  தோற்றம் எனவே,  "தோற்றம் "  என்றார் புலவர்.  அருணகிரியாரும் இங்ஙனமே பாடினார்.

முருகன்தான் காப்பாற்ற வேண்டியவன் . மற்ற  தெய்வங்கள் வாழ்த்தப் பெறும். என்றாலும் காதலுக்குக் கைகொடுக்க வரும் கடவுள் முருகனே. என்பது தலைவி தோழி ஆகியோர் துணிபு.  வாதாடும் குறவரிட வள்ளிப் பங்கன் ஆதலினாலோ?

அளபெடைகள்  அழகுடையான.

நோ  தக்கன்றே :  இங்கு  "தக்கன்றே "  என்பதைப் பிரித்துப் பார்ப்போம்.

தகு + அ +து =  தக்கது.

தகு + அன் + து  = தக்கன்று.

தகு ​+ அ + து =  தகுவது .

இவை ஒரே பொருளன . இங்கு அன் எதிர்மறைப் பொருளில் வரவில்லை.
செய்தனம் என்ற வினைமுற்றிலும்  finite verb அப்படியே.

நில்லன்மீர் =  நில்லாதீர். இங்கு .எதிர்மறை..  அல் > அன் .


புலவர்  பெருஞ்ச்சாத்தனார் இங்கு தலைவியை ஓர் இறைவணக்கப் பண்பாடு உடைய பெண்மணியாகக் காட்டியது அறிந்து போற்றத்தக்கது ஆகும். அவள் நம்பிக்கையுடன் வேண்டிகொண்டது முருகப் பெருமானிடம். பூசையோ மற்ற தெய்வங்களுக்கும் நடைபெறுகின்றது.  வேற்றுப் பெருந்தெய்வங்கள்  அவளுக்கு உதவும் என்ற நம்பிக்கை இல்லை என்றாலும்,
அவற்றையும் வாழ்த்த அவள் தவறவில்லை. இதுவே நல்ல நாகரிகம் என்பதும் இறைக்கொள்கை நல்லிணக்கம் என்பதும் இங்குக்  கோடிட்டுக் காட்டவேண்டிய  உயர் பண்புடைமை ஆகும்.

edited
edited again: 19.2.2019 some letters (alphabet) missing. Inserted.














"கவ்வை" என்பது. கவ்விக்கொள்வது.



சில நிகழ்வுகள் நம்மையும் நம் நேரத்தையும் "கவ்விக்" கொண்டுவிடுகின்றன. கவ்வுதல் என்றால் என்ன? அது இரண்டாகப் பிளந்து நம்மை அகப்படுத்தி, இறுகப் பிடித்துக் கொள்கின்றது . விடுபாடு என்பதோ கடினமான காரியம் ஆகி விடுகிறது.

இப்போது கிசுகிசுப்புகள் என்று சொல்லப்படும் பேச்சுகளும் ஒருவாறு கவ்வுதலைச் செய்வனவே. இக் "கவ்வுதலில்" அகப்பட்டுக்கொள்வதும் மன உளைச்சல் தருவதேயாம். அலர் எழுதலும் அப்படியே. இன்னும், துன்பம், துயரம், ஆழ்ந்த எதிர்பார்ப்பு, பொறாமை முதலியவையும்   ஆம்.

இவை எல்லாவற்றுக்கும் ஒரு சொல் என்றால், அதுதான் "கவ்வை" என்பது.
கவ்விக்கொள்வது, அல்லது கப்பிக்கொள்வது.

கவை, கவடு, கபடம்,கபாடம் எல்லாம் பிறகு காண்போம்.

Some matters consume you, others swallow you up.

ஞாயிறு, 29 ஜூன், 2014

Possibly the Guru of Ilayaraja and ARRahman

 இசை வல்லுநர்  தஞ்சை தன்ராஜ்
                                          
                                          -செ.அ.வீரபாண்டியன் –
http://musicdrvee.blogspot.in/                                    http://musictholkappiam.blogspot.in/

  ‘தமிழிசையின் இயற்பியல்’ (Physics of Tamil Music) என்ற எனது முனைவர் பட்ட ஆய்வு தொடர்பாக, 1990‍- களில் நான் பயன்படுத்திய அரிய நூலகங்களில் ஒன்று , சென்னை திருவான்மியூர் கலாசேத்ரா அருகில் உள்ள 'உ.வெ.சா நினைவு நூலகம்'.

அந்நூலகத்தில் சுமார் 30 பக்கங்களுக்குள் இருந்த ஒரு மிகச் சிறிய புத்தகம் என்னை  அதிர்ச்சி இன்பத்திற்குள்ளாக்கியது. சிலப்பதிகாரத்தில் உள்ள வட்டப்பாலைப் படத்துடன் ‘இசை விதி -> 1800 ->  பிரம்ம மேள பிரமாணம்’ -  தஞ்சை தன்ராஜ்’   என்பதை தலைப்பாகக் கொண்டு அப்புத்தகம் என்னை ஈர்த்தது. உடனே எடுத்து படித்தேன். 

அப்புத்தகத்தில் சிலப்பதிகாரத்தில் உள்ள வட்டப்பாலை முறை, மேற்கத்திய இசை முறை, மேளகர்த்தா ராக அமைப்பு உள்ளிட்ட கர்நாடக இசை ஆகியவற்றினை பற்றிய அரிய ஆராய்ச்சி முடிவுகள் இருந்தன. இப்படிப்பட்ட அரிய நூலை பதிவு செய்ய வேண்டும் என்று முடிவு செய்து, , எனது முனைவர் பட்ட ஆய்வில் அந்நூலைக் குறிப்பிட்டுள்ளேன். அதன் பின் அவரைப் பற்றி நான் கேள்விப் பட்டவற்றை கீழே தொகுத்து குறிப்பிட்டுள்ளேன். இவை எந்த அளவுக்கு நம்பத் தகுந்தவை என்பதை இனிவரும் ஆய்வுகள் தான் தெளிவுபடுத்த வேண்டும்.

1. தஞ்சை மாவட்டத்தில் ஒரு கிறித்துவ பாதிரியரால் அனாதையாகக்(orphan) கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்.
2. இசையில் நிபுணராகும் அளவுக்கு அவர் பெற்ற இசை தொடர்பான கல்வி பற்றி எந்த தகவலும் இல்லை.

3. சென்னை மைலாப்பூர் தெப்பக்குளம் எதிரேயுள்ள சாய் லாட்ஜில்(Sai Lodge)  பிரம்மச்சாரியாக, சாகும் வரை ஒரு அறையில் வாழ்ந்து, இசை வகுப்புகள் நடத்தி வந்துள்ளார்.

4. இளையராஜா, ஏ, ஆர், ரகுமான் உள்ளிட்ட இசை அமைப்பாளர்கள் அவரிடம் இசை பயின்ற மாணவர்களில் அடங்குபவர் .

5. குடிப்பழக்கம் உள்ளவர். விஸ்வநாதன்‍ - ராமமூர்த்தி திரை இசையில் கொடி கட்டி பறந்த காலத்தில்,  இரவில் அவரது அறைக்கு சென்று,  ' ஸ்காட்ச் விஸ்கி'(scotch whisky)  பாட்டிலைக் கொடுத்து, அவரிடம் இருந்து, இசை நோட்ஸ்களைப்(Music Notes)  பெற்று தமது திரை இசையில் பயன்படுத்தியுள்ளனர்.

6. இளையராஜா பிரபல திரை இசை அமைப்பாள‌ரான பின்னரே அவர் மறைந்தார். அவரது இறுதிச் சடங்குகளை தமது செலவில் இளையராஜா செய்து முடித்து, அவர் அறையிலிருந்த 'அனைத்தையும்' தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

7. அவர் இசை தொடர்பாக எழுதிய குறிப்புகள் பற்றி இளையராஜா எதையும் வெளிப்படுத்தவில்லை. அதைப் பற்றி பேசுவதையும் விரும்புவதில்லை.

8. அவரின் இசைக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டே இளையராஜா திரை இசையில் கொடி கட்டி பறந்தார். அவை முடிந்தவுடன், அவர் 'ஹிட்'(Hits) பாடல்கள் கொடுப்பதும் முடிந்து விட்டது.

திருவாளர்கள் எம்.எஸ். விஸ்வநாதன்,இளையராஜா,ஏ.ஆர்.ரகுமான் போன்று அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தான்,  மேலேக் குறிப்பிட்டுள்ளவை எந்த அளவுக்கு சரி, அல்லது தவறு என்று தெளிவுபடுத்த வேண்டும்.  

தன்ராஜ் பற்றிய எனது முயற்சிகளைப் பற்றி கேள்விப்பட்ட பத்திரிக்கையாளர் நாகார்ஜுனன் (பெயர் எனது நினைவில் உள்ளபடி) சென்னையில் மாநிலக்கல்லூரியில் நான் பணியாற்றிய காலத்தில் என்னை சந்தித்தார். தன்ராஜின் இசைக் குறிப்புகள் என்னிடம் ஏதும் இருக்கிறதா என்று கேட்டார். நான் உ.வெ.சா நூலகத்தில் படித்த அந்த புத்தகத்தைப் பற்றி சொன்னேன். இளையராஜவிடம் அது பற்றிய தகவலைப் பெற பலர் முயன்றும் ஒன்றும் பலனில்லை என்று வருத்தத்துடன் என்னிடம் சொல்லி, விடை பெற்றார்.

தமிழ்நாட்டில் மேற்கத்திய இசை, கர்நாடக இசை, தமிழ் இசை பற்றிய ஆழ்ந்த புலமையுடன் வாழ்ந்து மறைந்த இசை வல்லுநர் அவர். உ.வெ.சா நூலகத்தில் உள்ள அந்த புத்தகம் மட்டுமே அதற்கான சான்று. கூடுதல் சான்றுகளை அவரிடம் இசை ப‌டித்த மாணவர்களும்,தொடர்பில் இருந்தவர்களும் தான் வெளிப்படுத்த வேண்டும். அது 'குருவிடம்' காண்பிக்க வேண்டிய நன்றியுமாகும்.

தன்ராஜின் இசைக்குறிப்புகள் கிடைத்து, அவற்றை புத்தகமாக வெளியிடும் முயற்சியில் யாரேனும் ஈடுபட்டால், அவற்றைத் தொகுத்து தரும்(Editing)  பணியை எந்த கட்டணமுமின்றி (without remuneration) நான் செய்து தர விரும்புகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்


(Reproduced without  any amendment or modification.  The writer and not the Blogger Sivamala is responsible for the contents. Any query or objection is to be referred to the writer. Blogger Sivamala excludes any liability)

சனி, 28 ஜூன், 2014

chimpanzees like Indian music.


மரத்தினில் வாழ்கின்ற மாந்தற்போலி == அதன்
மனத்திற்கே தேனாகும் நம் நாட் டிசை.
உரத்தவோர் வாயொலி பல்லியத்தின்  == மேல்
உலகத்தின்  நல்லிசை கொள்ளாததாம்!

இந்திய நல்லிசை காணியற்கை ‍‍== தன்னை
எடுத்துள் வளர்த்திய பேரிசையே!
வந்திதைச் சொன்னார் அறிவியலார் ‍‍‍== அவர்
வாயுரை தந்தது பேருண்மையே.



மாந்தற்போலி --- மனிதன் போன்ற பெரிய குரங்குகள். பல்லியம் - பல வாத்தியங்கள்  அவற்றின் கருவிகள்.
"செல்லாற்றுக் கவலை பல்லியங் கறங்க" --- குறுந்தொகை 263.
எடுத்துள் வளர்த்திய  -  மேற்கொண்டு உட்பெய்து  வளர்ச்சி பெறச் செய்த.


Chimps prefer African, Indian tunes over strong beats ty...
While preferring silence to music from the West, chimpanzees apparently like to listen to the different rhythms of music from Africa and India, according to new res...
https://us-mg5.mail.yahoo.com/neo/launch?.rand=bjtfp0j39l0b6#412832436

வெள்ளி, 27 ஜூன், 2014

Amma pharmacies.

அம்மா மருந்தகங்கள் ‍‍‍‍‍‍===  நல்லா
னந்தம் பொருந்திடவே,
எம்மா நிலத்துமில்லா === வெல்லம்
இடும்நற் கலத்தினில்பால்.

ஏழை எளியமக்கள் ‍‍‍‍‍‍=== நோய்
எரிவில் மருந்தின்றியே,
வீழு நிலையகற்றி  ‍‍=== விடி
வெள்ளியுள் உய்ப்பதுவாம்.


வெல்லம் இடும்நற் கலத்தினில்பால்  -   இனியது ,  சிறப்பானது.
எரிவில் -  மிகுதியில் ; உச்சத்தில்


Chennai: After Amma canteens, water and salt, Tamil Nadu Chief Minister Jayalalithaa is all set to launch Amma pharmacies on Thursday.
The state government plans to launch 10 such pharmacies across Chennai and 90 in the rest of the state. These medical shops will sell medicines at a subsided rate to the general public.
The government has allotted Rs 20 crore for this project.
Jayalalithaa to launch Amma pharmacies in Tamil Nadu today

Jayalalithaa's canteens are a big hit in the state




__._,_.___



வியாழன், 26 ஜூன், 2014

திறந்திடலாம் அந்த நாட்டில்

குழும்புகளைத் திறந்திடலாம் அந்த நாட்டில்,
கோணலாகி வீழ்ந்துவிட்டால்  அடைக்க லாமோ?
குறும்புமிகு சிலவிதிகள் கூடிப் போக‌
குத்திவீழ்ந்த வணிகருக்குத் தொல்லை தொல்லை!
வரம்புகளே அதிகமையா அங்கு  போனால்
வழியொன்றும் கிட்டாது குழிக்குள் மாட்டி
திரும்புவது யாங்ஙனமோ திகைத்து நிற்பீர்
தீரஎண்ணிச் செயல்படுவீர் நலமே கொள்வீர்.


குழும்பு = கம்பெனி.

ஏதேனும் தொழிலொன்று செய்தல் எண்ணி,
இனிதான இடமென்றும் மனத்தில் எண்ணி,
காதினிலே நல்லோரும் சொன்னார் மீறிக்
கடைமுனையின் தீவினைநீர் விரைந்து  நண்ணி
யாதெனவே ஆயாது குழும்பு கொண்டீர்
பாதியிலே நட்டமெனின் யாது செய்வீர்?
ஓதினரே ஆய்ந்தியல்வீர் உண்மை காண்பீர்
ஆய்வதற்கு நிகரில்லை அறிந்து கொள்வீர்.

கலை­­­­­­­ம­­­­­­­கள் என்று அழைக்­­­­­­­கப்­­­­­­­படும் திருமதி சாவோ ஜியாங்


உலகின் அருமை­யான மொழி யான தமிழ்மொழியின் பயன் பாட்டை புதிய

 முயற்சிகளைத் தீவிரமாக தொடரப்போவதாக சீன அனைத்­­­­­­­து­­­­­­­லக வானொலி

 தலை­­­­­­­வி திருமதி சாவோ ஜியாங் சூளுரைத்து இருக்கிறார்.


கலை­­­­­­­ம­­­­­­­கள் என்று அழைக்­­­­­­­கப்­­­­­­­படும் திருமதி சாவோ, நேற்று தொடங்கிய

 சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாட்டில் ‘எல்லை­­­­­­­கள் கடந்த தமிழ் இதயம்’
என்ற தலைப்பில்  (தமிழில் )   உரையாற்றினார். சீனத் தகவல் தொடர்பு பல்­கலைக்­க­ழ­கத்­தில் 1995ஆம் ஆண்டில் தமிழ்மொழியைப்  பயிலத் தொடங்­கி­ய­தாகத் தெரிவித்த கலைமகள், அப்போது தமிழ் மொழியில் தமக்கு அதிக
நாட்டம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார்.

“தொடக்கத்தில் தமி­ழி­லுள்ள ழ,ள,ல போன்ற எழுத்­துக்­களை உச்­ச­ரிப்பது சிரமமாக இருந்தது.  தமிழில் எழுத்­துக்­களின் மொத்த எண்­ணிக்கையைப் பார்த்து தயக்­க­மும் ஏற்பட்டது"

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்.  23.6.14

சிங்கப்பூர் தமிழ் முரசு  நன்றி

http://tamilmurasu.com.sg/story/38949

திங்கள், 23 ஜூன், 2014

Rushing for food in temple events

பூசைகளில்  அவிசேகம் ஆராதனை === அங்கு
புகுந்துசோ றுண்டாலும் புண்யம்  கிட்டும்! ‍‍‍=== நம்
நேசர்களும் இடையூறும் பலவுண் டேனும்=== நின்று
நேர்படுவார் அவர்மகிழ்வு நம்மானந்தம்.

வரிசைவழி காட்டுகிற காவ லாளர் ‍‍‍‍=== இவர்
வார்த்தைகளை நாம்மதித்தல் கடமையன்றோ?
புரிந்துணரா மக்கள்போல் உடைத்துக் கொண்டு=== அங்கு
புசிப்பதற்கே முண்டியடித் தோடல் நன்றோ?

பண்பாடு நமக்குண்டு காத்துக்  கொள்வோம்=== ‍‍எதிலும்
பகிர்ந்துண்போம் வயிற்றுக்கோ அடிமை ஆவோம்?
தன்பாடு தானுண்டே உலகம் இல்லை ‍‍‍=== என்றே
உண்பேனென் றோடுவது "புன்பாடு" என்போம்.

புன்மை  + பாடு =  புன்பாடு !  புன்மை படுதல் . 

ஞாயிறு, 22 ஜூன், 2014

வீரமா காளியம்மை நேரில் வந்தாள்

சிங்கப்பூரில்  வீரமாகாளியம்மன் ஆலயத்தில்  22.6.2014lல்   கும்ப நீராட்டு நிகழ்ந்தது. .....(கும்பாபிஷேகம்). அதுபற்றிச் சில வரிகள்.
இவ்வாலயம் சிறப்பாக எடுத்துக் கட்டப்பெற்றுள்ளது.


வீரமா காளியம்மை நேரில் வந்தாள்
தீருமினி வேதனைகள் பேரே ஓங்கும்!
சீரங்கு விளங்கும்சீ  ராங்கச் சாலை
சேருபல தெருக்களிலும் கூறும் நாமம்
வீறுடனே வான்முட்டும்!   நீறும் பூசி
யாரும்கை கூப்பிடவே யாழே போல‌
ஊறுமிசை! உயர்முழுக்கு, கும்பம் காணும்.
மாறிலதாம் மங்கலமே சிங்கை தன்னில்.

குறிப்பு:  பெரும்பாலும் எதுகைகளை வைத்தே இது .புனையப்பட்டுள்ளது மாறிலதாம் =  மாறுபாடில்லாத .

அடுத்துவரும் இடுகையும் இவண் யாகசாலையில் வெளியில் நடந்தது பற்றியது ஆகும். 

வெள்ளி, 20 ஜூன், 2014

Ph.D., dedicated service, no promotion!

You may read about this Tamil scholar:

://www.deccanchronicle.com/140530/nation-current-affairs/article/tamil-scholar-left-high-and-dry

To secure a promotion, a PhD is not enough!!

"காரர்கள்" : வேலைக்காரன், வண்டிக்காரன், etc etc

வேலைக்காரன், வண்டிக்காரன், சண்டைக்காரன், குடும்பக்காரன் என்று "காரர்கள்" பலருளர்.  காரன் என்பதென்ன?

காரன் என்றொரு சொல், அகரவரிசைகளில் காண்பதரிது.   அது ஒரு தனிச்சொல் அன்று.

கருத்தல் = செய்தல் என்னும் பொருளில் ஒரு பழங்கால் வினைச்சொல் இருந்ததென்றும் அதனின்று கருவி, காரியம், காரணம் முதலிய தோன்றினவென்றும், பின் அது வழக்கொழிந்தது என்றும் மொழிஞாயிறு  தேவ நேயப் பாவாணர் மீட்டுருவாக்கம் செய்து  கூறியுள்ளார். எனவே காரன் என்பதும் கரு என்னும் சொல்லினின்று பிறந்து செய்வோன் என்னும் பொருளில் வழங்கி வந்துள்ளது என்று கூறலும் கொள்ளற்குரித்தே.

ஆயினும், நாம் வேறு வழியில் இஃது அமைந்திருக்குமா என்று  பார்க்கலாம்.

வேலைக்காரன் <  வேலை+ கு+  ஆர் + அன்.
இதில் அன் என்னும் ஆண்பால் விகுதியை எடுத்துவிட்டுப் பார்த்தால்:

வேலை + கு + ஆர்.

வேலைக்கார் என்றாகிறது.  ஆர் என்ற பலர்பால் விகுதி,  அவர் என்பது அதன்  பொருள்.  அர், ஆர் இரண்டும் அத்தகையனவாகும்.

ஒரு வாக்கியத்தின் சுருக்கமே அது.  உண்மையில், வேலைக்கு அவர், சண்டைக்கு அவர் என்று சொல்வதே அதுவன்றி மற்றில்லை.

பின் ஆர் என்பது பன்மை எனல்  மறந்து, மீண்டும் அதன்பின் ஓர் ஆண்பால் அல்லது பெண்பால் ஒருமை விகுதியைச் சேர்த்தனர். அது ஒருமை‍பன்மை ஒருவித "மயக்கம்". வழு எனினும் அமைந்துவிட்டபடியால், இலக்கணம் ஏற்கும் ‍ அது வழுவமைதி எனப்படும்.

தகப்பன் என்ற ஒருமையில், ஆர் விகுதி சேர்த்து தகப்பனார் என்று மரியாதைப் பன்மையில் கூறுவதும் வழுவமைதியே.

கு என்ற உருபு பற்றித் தனியே எழுதவேண்டும். இங்கு வேண்டாம்.

ஆக, காரன் என்பது பிறழ்பிரிப்பினால்  metanalysis.  விளைந்த சொல். 

வியாழன், 19 ஜூன், 2014

தை மாதம்.



 இம்மாதத்துக்கு ஏன் இப்பெயர் வந்ததென்று இங்கு ஆய்வோம். மார்கழியும் தையும் முன்பனிக்காலம். தைத்தல் ‍ இணைப்பு என்று பொருள்படும சொல் என்பது முன் பதிந்த இடுகைகளிற் கூறப்பட்டது. முன்பனிக் காலத்தில் மார்கழி தையுடன் இணைந்து வரும் மாதமாகையால்,  இணை  வரும் மாதம் என்னும் பொருளில் தையென்றனர்.

"முன்பனியாகிய மார்கழியும் தையும் தொடர்ந்தாற்போல..." என்பது நச்சினார்கினியர் உரை.  (தொல். அகத்திணையியல் )

"பின்பனிதானும் உரித்தென மொழிப" (தொல்,40. அகத்தினையியல்.)


இனி பூக்கள் பூத்துக்குலுங்கி  மனத்தினில் ஓர் இணைப்பினை ஏற்படுத்தும் மாதம் எனினும் ஆம்.

முருகனுக்கு உகந்த மாதமாய்   பற்றாளனோடு இறைவன் ஓர் இணைப்புக் கொண்டு அருள்புரியும் மாதமெனினும் ஆம். பொங்கல் பண்டிகை குதூகலம் தரும் நாட்கள் கொண்ட மாதமெனினும் ஆம்.

இவற்றுள் ஒவ்வொன்றுக்காகவும் ஒருசேர அனைத்துக்காகவும் இணைப்பினைத் தரும் நன்மாதம்  என்றும் கூறுதலும் பொருத்தமே.

மொத்தத்தில் தை எனின்  இணைப்பு ஆகும். அதுவே சொல்லாக்கத்து அடிப்படைக் கருத்து.

தொடர்புடைய இடுகைகள்:

thairiyam

http://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_27.html

thairiyachAli


 thaivaruthal

பக்கணம் பட்சணம்

பட்சணம் என்பது  காண்போம்.  இலையில் சோறு, குழம்பு முதலானவற்றுக்குப் பக்கத்தில் வைக்கப்படுவது பக்கணம் >  பட்சணம்.

பகு+ அம் = பக்கம்.
பகு+ அணம் = பக்கணம்.

பின் பக்கணம் > பச்சணம் > பட்சணம் ஆயிற்று.

அணம் என்பது ஒரு விகுதி.  கட்டு+ அணம் ‍  =  கட்டணம் போல அணம் என்னும் விகுதி பெற்றது பக்கணம்.

அணம் என்னும் விகுதி அண் என்னும் அடியிற்றோன்றியது.

அண் >  அண்மு(தல்.)
அண் >  அண்மை.
அண் >  அணிமை.
அண்  >  அண்டுதல்,  அண்டை.
அண்  > அணு
அண்  >  அணுகு(தல்)
அண் > அண்டி (பழத்தை அடுத்திருப்பதாகிய முந்திரிக் கொட்டை)

எனப்பல


அண்டா:    ‍ ஆக்கியவற்றை  கொட்டிவைக்க  அடுப்புக்கு அண்டையில் வைக்கப்படும் பெரிய பாத்திரம்.  பின்  அண்டாவும் ஆக்கப் பயன்பட்டது,

விகுதிகள் ஆதியிற் பொருளுடன் நின்றவை எனினும் பின்  தம் பொருளிழந்து வெறும் சொல்லாக்கத்துக்குப்  பயன்பட்டுள்ளன, அதனால் சொற்கள் பல்கிட வழியேற்படலாயிற்று.

பச்சை  என்பது இங்கு காய்கறிகளைக்  குறிக்கும் என்றும்  "அணம்" பின்னொட்டுப் பெற்று பச்சணம் ஆகி, பின் பட்சணம் ஆயிற்று  என்பாரும் உளர்.

இப்போது  பச்சணம்  (பட்சணம்)  பலவகை உணவுகளையும் குறிப்பதாக விரிந்துள்ளது.  எ-டு :  கேரளீய பட்சணம்  .Here   they meant Kerala Cuisine or kinds of kerala food.

புதன், 18 ஜூன், 2014

பச்சடி



இந்தச் சொல் பேச்சு வழக்கில் மக்கள் புனைந்த சொல்.  சொல்லை அணுகும் போதே  இது புலவர் புனைவன்று எனத் தெரிகின்றது.

பச்சை + இடி என்ற இரு சொற்களால் ஆனது இது.  சை என்பதில் உள்ள ஐகாரம் குறுகி. (கெட்டு )   ச் என நிற்கவே, பச்(ச்+ஐ)  > பச்ச்  என்றாகி, இடி சேர்ந்து பச்(ச்+இ)டி என்று இணைந்து, பச்சிடி ஆனது. பிறகு வாயொலிக்க  வசதியாக, பச்சிடி இறுதியில் பச்சடி  ஆயிற்று. ஐகாரத்தின் இடத்தை மாத்திரை (ஒலியளவு ) குறைந்த இகரம் மேற்கொண்டது.

புலவர் நோக்கில், பச்சை + இடி = பச்சையிடி > பச்சயிடி >  பச்சடி  எனவாகி, ஐகாரம் குறுக. யகர உடம்படு மெய ஏறிய இகரம் ஒழிந்தது என்று கூறுதல் ஒரு கலையே ஆகும்.

சொல்லாக்கதில் பயன்பட்ட சொல், அடி என்பதினும் இடி என்பதே உண்மை நிலையைக் காட்டுவது, ஏனென்றால்,  இது முன்பு இடித்துச் செய்யப்பட்டவற்றையே குறித்துள்ளது.கெட்டுவிடாமல் இருப்பதற்காகப்  பின் சூடு காட்டப்பெற்று,  நாளடைவில் வேகவைத்துச் செய்யப்பெறுவ   தாயிற்று.

தமிழில் ஐகாரம் குறுகுதல் தொல்காப்பியர் முதலான நம் இலக்கணப் பெரியோர் கண்டு ஓதிய ஒன்றே ஆம். 

திங்கள், 16 ஜூன், 2014

ரசம்

இப்போது நாம் தினமும் அருந்தும் "ரசம் " பற்றி ஆய்வோம்.  இந்தச் சொல்  சமஸ்கிருதத்திலும்  மலாய் மொழியிலும் கூட உள்ளது.

"rasa sedap"   -சுவையாக உள்ளது என்று மலாயில் வரும் .. saya rasa......  I feel ....என்று மனவுணர்வும் குறிக்கும்.

அரை (அரைத்தல்)  >  அரையம் >   அரயம்  >  ரசம் .

சில மூலிகைகள்  அரைத்துக் கொதிக்கவைத்துச்  சாறு எடுக்கப்பட்டு  அதுவே ரசம் எனப்பட்டது. அரைக்காமல் கொதிக்கவைத்து எடுக்கப்பட்ட சாறும்,  இதில் அடக்கப்பட்டது.  (இது பொருள் விரிபாடு  ஆகும். extension  of meaning. )

முடக்காத்தான் முதலியவை அரைத்துக்  கொதியூட்டிச்   சாறு எடுக்கப்படும் .

ரை  என்பது ர ஆனது ஐகாரக்குறுக்கம். யகரம் சகரம் ஆவது முன் கூறப்பட்டுள்ளது.

நவரசம் - தொண்சுவை  என்று தனித்தமிழில் தரப்படும்.

ரசம் என்பது பேச்சு வழக்கில் வந்த  அடுக்களைச் சொல்.  தலையிழந்தது .

ஞாயிறு, 15 ஜூன், 2014

compulsory Tamil situation in Tamil Nadu


Chennai: Despite taking a pledge to compulsorily teach Tamil as main language in 2006, several private schools in Tamil Nadu continued to teach other languages keeping the students in the dark.
Officials in the directorate of matriculation schools say  they have already informed the schools and even got the declaration form signed by school authorities that they would comply with the norms.
The Tamil Nadu Tamil learning Act (2006) made Tamil a compulsory language to be taught in schools starting from 2006-07 academic year. And students who joined class 1 in 2006 academic year had to take up Tamil as a mandatory subject. Schools, which failed to follow the norm, have put the students at risk now. On condition of anonymity, a senior school education department official told DC that it was a gross violation by schools, which have not taught Tamil as main language. “The government had informed them and asked them to send the declaration form. We have copies of several schools who have signed the forms,” said the official.
Speaking to DC, S. Arumainathan, state president, Tamil Nadu students parents welfare association, said, “The private schools have approached the high court only to save themselves from parents.
The schools cannot claim to be ignorant of the Act. They have given in writing that they would oblige the norm laid by the government. It is now the responsibility of schools to answer the parents.”
He added that these schools are worried about answering the parents as the students who studied other languages would not be allowed to take class 10 exams in the next academic year, 2015-16.
Sukumar Jaisingh, member of the Association of Matriculation Schools and Managements in TN and Pudhucherry, the association which moved the court against teaching Tamil as compulsory language,  said, "We are not against teaching Tamil. But considering the inconvenience of students we are forced to teach the language, which they are comfortable with. Moeover, we did not receive any letter from the school education department in 2006 making  Tamil a compulsory language."

ரம்பம் (saw)

ரம்பம்   என்பது அழகான ஒரு தமிழ்ச்சொல்லின் திரிந்த வடிவம்.

அறு > அறம்பு > அரம்பம் > ரம்பம்.

இதில் அறு  : பகுதி.  அம், பு, மீண்டும் அம் என்பன சொல்லாக்க விகுதிகள்.

நிலையம்:  நில் + ஐ + அம்  (இரு விகுதிகள்).  ரம்பத்தில் 3 விகுதிகள்.

று, ற என்பன ரகரமாய் மாறியது எப்படி?

கரு > கறு;  கருப்பு > கறுப்பு  என்பவை காண்க.

ரம்பத்தில் அறுத்தல் அடிச்சொல்.

பார்வை ஒன்றே போதுமா ? என்கிறார் தொல்காப்பியனார். "மொழிபொருள் காரணம்  விழிப்பத் தோன்றா"  என்கிறார்.

சனி, 14 ஜூன், 2014

சேமித்தல்

சேமித்தல் என்ற சொல், சேர் என்பதனடியாகப் பிறந்த சொல்லே ஆகும். சேமித்தல் அமைந்த விதமாவது:

சேர் > சேர்மி  > சேமி >  சேமித்தல்,  (ரகர  மெய் மறைவு)

இதேபோல் நேமித்தல்   என்பதும்.

நேர் >  நேர்மி  >  நேமி >  நேமித்தல்.  இதுபின் நியமித்தல் என்று திருத்தி அமைக்கப்பட்டது.  நில் > நி > நிய > நியமி  > நியமித்தல் என்றும் கூறுப.

ஒரு > ஒருமி > ஒருமித்தல்  இது ஓர்மித்தல் என்று வராத காரணம், மிகரத்தின் முன், ஒரு என்பது ஓர் என்று  திரியாது.

நில் > நிரு > நிருமி > நிருமித்தல்.( நிற்கச்செய்தல்,  நிறுவுதல்.) /*

லகரம் <> ரகரம் ஒன்று மற்றொன்றாகத் திரியுமென்பதை மறக்கலாகாது. பல மொழிகளில் இது இயல்பு.


*இதை வேறு விதமாகக் கூறுவதாயின் :
நில் > நிலுமி > நிருமி > நிருமித்தல்.
இது இன்னோசை கருதிய திரிபு மட்டுமன்று,  லு> ரு திரிபு முறைப்படியானதும் கூட.  நில்>  நிலுவை என்பது காண்க. இது நிருவை என்று திரியின், நிறுவை  என்பதனுடன் குழம்பக் கூடும் (  மயங்குதல்).

ஒ ..நோ

நிலு >  நிரு    (மேற்படி )
கலு   >  கரு (  கலுழன் >  கருடன்  )

வெள்ளி, 13 ஜூன், 2014

செம்முடிச் சீனப் பெண்கள்

செம்முடியாய் வேண்டுமென்று சீனப் பெண்கள்
சென்றுபணம் செலவாக்கி மாற்றிக் கொண்டு
தம்பணிக்குப் போகின்ற நேர்த்தி  தன்னைத்
தரணிபடைத் தோனும்கண் டயர்ந்து போவான்!
அம்மணியே உம்மழகும் அணிகள் தாமும்
அழகழகே என்றுபுகழ்ந்  துயர்த்தி விட்டால்
இம்முடியே நிரந்தரமென் றிருத்திக் கொள்வார்
இனியதொரு சிட்டு நடை நடந்து செல்வார்.

செம்முடி பற்றிய மரபணு ஆய்வு முடிவை இங்குக் காண்க .http://sivamaalaa.blogspot.com/2014/06/blog-post_13.html

Note:  Sorry the server was down from 10.00 p.m. to  abt 11.59 p.m. as I was trying to insert the link address.