திங்கள், 23 ஜூன், 2014

Rushing for food in temple events

பூசைகளில்  அவிசேகம் ஆராதனை === அங்கு
புகுந்துசோ றுண்டாலும் புண்யம்  கிட்டும்! ‍‍‍=== நம்
நேசர்களும் இடையூறும் பலவுண் டேனும்=== நின்று
நேர்படுவார் அவர்மகிழ்வு நம்மானந்தம்.

வரிசைவழி காட்டுகிற காவ லாளர் ‍‍‍‍=== இவர்
வார்த்தைகளை நாம்மதித்தல் கடமையன்றோ?
புரிந்துணரா மக்கள்போல் உடைத்துக் கொண்டு=== அங்கு
புசிப்பதற்கே முண்டியடித் தோடல் நன்றோ?

பண்பாடு நமக்குண்டு காத்துக்  கொள்வோம்=== ‍‍எதிலும்
பகிர்ந்துண்போம் வயிற்றுக்கோ அடிமை ஆவோம்?
தன்பாடு தானுண்டே உலகம் இல்லை ‍‍‍=== என்றே
உண்பேனென் றோடுவது "புன்பாடு" என்போம்.

புன்மை  + பாடு =  புன்பாடு !  புன்மை படுதல் . 

கருத்துகள் இல்லை: