வியாழன், 5 ஜூன், 2014

விஷாலம்?

விசாலம் என்பது விய (வியன் )  என்னும் விரிவு குறிக்கும் சொற்களிலிருந்து திரிந்தமை கண்டோம்.   Click:
http://sivamaalaa.blogspot.com/2014/06/blog-post_6614.html


நீங்கள் இதில் செய்ய வேண்டியது: இதே ஒலி யுள்ள சொல் சமஸ்கிருத அகரவரிசையில் உளதா என்று தேடிக் கண்டுபிடியுங்களேன். அது நல்ல பயிற்சியாய் அமையுமன்றோ?

நிற்க, விசாலத்தை விஷாலம் என்று  எழுதுவது பொருந்துவதாகத் தெரியவில்லை. விஷம் என்பது கொல்மருந்து.  ஆலம் என்பது ஆலகால விஷமென்னும் கொல்மருந்து. Poison  +  Poison!  Double poison!!

நிலவே நீ  இந்தச்  சேதி  சொல்வாயா ?
ஆலம் உண்ட  திரு  நீல கண்டனிடம் !

என்றொரு  திரைப்பாடல் வருகிறது!  ஆலகால விடத்தை (விஷத்தை) உண்டு உலகைக் காப்பாற்றியவன் சிவபெருமான் . அவன் "கருணா மூர்த்தி !" என்போம்.    ஆலம்  என்பது  கொடும் கொல்குழம்பு !  


 ஆக  இது நற்பொருள் தருவதாக இல்லை.

ஆகவே, விசாலம், விசாலாட்சி என்றே எழுதுவது நலம்.

கருத்துகள் இல்லை: