வியாழன், 19 ஜூன், 2014

தை மாதம்.



 இம்மாதத்துக்கு ஏன் இப்பெயர் வந்ததென்று இங்கு ஆய்வோம். மார்கழியும் தையும் முன்பனிக்காலம். தைத்தல் ‍ இணைப்பு என்று பொருள்படும சொல் என்பது முன் பதிந்த இடுகைகளிற் கூறப்பட்டது. முன்பனிக் காலத்தில் மார்கழி தையுடன் இணைந்து வரும் மாதமாகையால்,  இணை  வரும் மாதம் என்னும் பொருளில் தையென்றனர்.

"முன்பனியாகிய மார்கழியும் தையும் தொடர்ந்தாற்போல..." என்பது நச்சினார்கினியர் உரை.  (தொல். அகத்திணையியல் )

"பின்பனிதானும் உரித்தென மொழிப" (தொல்,40. அகத்தினையியல்.)


இனி பூக்கள் பூத்துக்குலுங்கி  மனத்தினில் ஓர் இணைப்பினை ஏற்படுத்தும் மாதம் எனினும் ஆம்.

முருகனுக்கு உகந்த மாதமாய்   பற்றாளனோடு இறைவன் ஓர் இணைப்புக் கொண்டு அருள்புரியும் மாதமெனினும் ஆம். பொங்கல் பண்டிகை குதூகலம் தரும் நாட்கள் கொண்ட மாதமெனினும் ஆம்.

இவற்றுள் ஒவ்வொன்றுக்காகவும் ஒருசேர அனைத்துக்காகவும் இணைப்பினைத் தரும் நன்மாதம்  என்றும் கூறுதலும் பொருத்தமே.

மொத்தத்தில் தை எனின்  இணைப்பு ஆகும். அதுவே சொல்லாக்கத்து அடிப்படைக் கருத்து.

தொடர்புடைய இடுகைகள்:

thairiyam

http://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_27.html

thairiyachAli


 thaivaruthal

கருத்துகள் இல்லை: