வெள்ளி, 19 நவம்பர், 2021

சென்னை வெள்ளம் ( வேண்டுகோள் கவிதை)

 

சென்னைநகர் தண்ணீர்க்குள் அமிழ்ந்து காணும்

சீரகன்ற நிலைகண்டோம் துன்பம் கொண்டோம்

மின்னலொடு பேய்மழையால் மக்கள் அல்லல்

மிசைபொருளும் உண்ணீரும் இல்லா வாட்டம்!

பன்னரிய பல்லிடர்கள் அடைந்தார் முன்னர்,

பின்னிதுநாள் காறுமதில் விடுபா டின்றி!

இன்னுமதே நேர்ந்ததுவே திறமாய்த் துன்பம்

இனிவாரா வழிகண்டு பணிசெய் வீரே.



ஒண்ணும் பெரியோர் ஒன்றுபட் டுதவி

நண்ணிடும் நலமே பண்ணுதல் கடனே.



அரும்பொருள்

விடுபாடு -  துன்பத்தில் மாற்றம்

சீரகன்ற - கெடுதலான

மிசைபொருள் - உணவுப் பொருள்

பின்னிதுநாள் காறும் - இன்றுவரையிலும்

பன்னரிய - சொல்லிட முடியாத

ஒண்ணும் - இயலும்

நண்ணிடும் -  ஏற்ற

கருத்துகள் இல்லை: