வியாழன், 4 நவம்பர், 2021

கதி என்ற சொல்.

 கதி என்பது செல்லுதல், செல்வழி குறிக்கும் சொல்.  

இது கடுகுதல் என்ற வினைச்சொல்லிலிருந்து வருகிறது.

கடு > கடுகு~தல்   விரைந்து செல்லுதல்..

அடிப்படைக் கருத்து:  கடுமை.

கடுகு+ தி >  (டு என்ற ஈற்று எழுத்தும் கு என்ற வினையாக்க விகுதியும் கெட்டு ) >  கதி ஆகின்றது.

கதி என்பது பேச்சில் கெதி என்றும் திரியும். " என் கெதியைப் பாரையா" என்று அழுதல் கேட்டிருக்கிறீர்களா?

கதி > கதி+ இர் >  கதிர்.  இகரம் கெட்டது.

கதிர் > கதிரவன்.

பண்டை நாட்களில் ஆறுகள், குளங்கள், மேடு பள்ளங்கள், மலை, கல்மேடுகள் என்று பல தடைகள் இருந்தன.  இவ்வாறிருந்தது மனிதனின் நகர்வினைக் கடினமானதாக்கியது.  அதனால் ஒன்றைக் கடத்தல் என்பது ஒரு கடின வேலையே  ஆயிற்று.

அதனால் கடு ( கடுமை ) என்பதிலிருந்து கடு+ அ > கட என்ற வினைச்சொல் தோன்றிற்று.  கடு என்பதன் ஈற்றுகரம் கெட்டது.

கட > கடத்தல்.

ஒன்றைக் கடந்து செல்லுதலும்  "கதி" என்றே ஆகும்.

கட > கடதி > ( இடைக்குறைந்து ) கதி.

நோக்கின், கடு+தி > கதி என்பதும் கட+ தி > கதி என்பதும் ஒன்றுதான்.

கட + தி என்ற சொல்லாக்கப் புணர்வில் வலி மிகவில்லை.

வலி மிகும் இடங்களும் உள. எ-டு:

இரும்புக் கம்பி நல்ல வெப்பக்கடத்தி.

கடத்தி என்பதில் ஏன் இங்கு  வலி மிகுகின்றது? கடத்தி என்பது பிறவினையினின்று தோன்றுவதால்.

கடத்து + இ > கடத்தி.

அறிக  மகிழ்க

மெய்ப்பு பின்பு.

  

கருத்துகள் இல்லை: