திங்கள், 22 நவம்பர், 2021

மலரோடு மதுரம்

 மது என்ற சொல்லை நாம் அணுகி அதனுட் புகுந்து பொருள்கண்டுள்ளோம். அவை இங்கு உள்ளன:

மது:   https://sivamaalaa.blogspot.com/2021/04/blog-post_21.html

https://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_12.html

தேன்மது  https://sivamaalaa.blogspot.com/2016/10/blog-post_27.html

இன்னும் சிலவும் உள. அவை பட்டியலில் கண்டுகொள்க.

https://sivamaalaa.blogspot.com/2018/04/blog-post_19.html என்னும் இவ்விடுகையிலும் காணலாம்.

மது + உரு + அம் =  மதுரம்.

மது - மயங்குவதற்கு,  உரு -  வெளிப்பாடு,  அம் -   அமைத்துத்தருவது,  மேலும் அம் விகுதி.  

து என்பது, வல்லினத் தகர ஒற்றின் மேலேறிய உகரமாதலின்,  மது உரு என்ற இரு சொற்புணர்ச்சியில் இரட்டிக்கும் என்று வாதிட்டாலும்,  பின்னர் இடைக்குறையும்,  மத்துரம் > மதுரம் ஆம் என்பதால் இந்த வாதம் நொடித்த வாதம்.  மேலும் இது வாக்கியச் சொற்சந்தி அன்று. இரட்டித்தலை எழுப்பாமை நேரத்தை மீத்துத்தரும்.

மயக்குக்கு உருத்தருவதாகிய தேன் இனிமை, மதுரம்.

மலரோடு மதுரம் மேவும் -  எனின், மலரில் இனிமை மேலேறிய(து) என்பது.

மனங்காணும் -  மவுனமானது என்பது பொருள்.

மோகன இராகம் -  காதலைத் தூண்டும் இராகம் அல்லது பாட்டு.

மது உரம் > மதுரம், உகரம் கெட்டது; உரம் - தெம்புதருவது எனினுமாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

கருத்துகள் இல்லை: