புதன், 10 நவம்பர், 2021

வெற்றிலைக்கு இன்னொரு பெயர்.

 நம் வலைப்பூவில் வெற்றிலை பற்றி ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் எழுதியுள்ளோம்.   அவை இங்கு உள்ளன.  படித்து மகிழவும்:

வெற்றிலை:   https://sivamaalaa.blogspot.com/2014/05/vetrilai.html

சருகு பிளகு  https://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_16.html

குரங்குக்கு மறுபெயர்கள்  ( வெற்றிலையைக் குறிப்பிடுகிறது)

https://sivamaalaa.blogspot.com/2021/05/blog-post_27.html

வெற்றிலை இல்லா வினை: https://sivamaalaa.blogspot.com/2018/02/blog-post_2.html  (கவிதை)

வெற்றிலை---  - - வேறு பெயர்கள்  https://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_7697.html

வெற்றிலை பெரும்பாலும் பல், நாவு முதலியவற்றை __ தூயதாக்குகிறது என்று வெற்றிலை போடுகிறவர்கள் சொல்கிறார்கள்.   போயிலை ( புகையிலை) யும் பலர் போடுகிறார்கள்.  நம் வீட்டுப் பாட்டிக்குக் கொஞ்ச நாட்களுக்கு முன் சிவகிரிப் போயிலை கிட்டாமல்  சிறிது இன்னலுற்றார்.  பின்பு கொண்டுவந்து அது கடைகளில் கிடைத்தது.  என்ன மகிழ்ச்சி!  ஆனால் போயிலைக்கு விலை அதிகம்.  போயிலையினால் புற்று நோய் வருகிறது என்று ஐயப்பாடு இருப்பதால்,  அது அதிக வரிவிதிப்புக்கு உட்படுத்தபடுகிறது.  .  

வெற்றிலைக்கு "நாவிலை"  என்பது மற்றொரு பெயராகும்.  ஆகவே நாவு தூய்மைப் படுவதற்கு வெற்றிலை இன்றியமையாதது என்று நம்  பாட்டி பூட்டிகள் காலத்தில் நம்பினர் என்று நாம் கருத இடமுண்டு.

தாம்பூலம் என்பது வெற்றிலையை மட்டும் குறிக்காமல்,  பாக்கு அல்லது சீவல்,  சுண்ணாம்பு, கத்தக்காம்பு  (கற்றைக்காம்பு) என வாயில் போடுவதற்குரிய பொருள்களின் தொகைச்சொல் என்று தெரிகிறது.   இதைத் தாம்பூலம் தரித்தல் என்பர்.

தாம்பூலம் என்பது பூலம் என்றும் குறுக்கம் அடையும்.

முகபூசணம்,  தக்கோலம், சுருளமுது, அடைக்காய்  என்பனவும் தாம்பூலம் என்பதற்கு மறுபெயர்கள்.

உதடுகள் சிவந்து சாயம் பூசியது போலும் தோன்றுதலால் முகபூசணம் ஆயிற்று. முகம் என்றது உதட்டைக் குறித்தது. 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

If you entered the compose mode please do not move your mouse over published material. You may be making unwanted changes . Please help by exiting the compose mode quickly.


கருத்துகள் இல்லை: