ஞாயிறு, 28 நவம்பர், 2021

நோய்நுண்மி உருமாற்றம்

 பழைய நோய்நுண்மி பவனி முற்றவில்லை

நுழைய முந்துகிற  புதிய உருமாற்றம்!

இழையும் வாசலிலே இறுதி செயல்வேண்டும்

தழைய விடலாமோ தரணி அறிவியலார்?


அதுவே பரவிடிலோ  கதறும் உலகிற்கே

சிதைவே அன்றியினிச் சேரும் நலமுண்டோ?

முதலே நாமடைந்த முடியாத் துன்பமெலாம்

விதமாய் வரும்போது விடுதல் விளக்கேது?


நோய்நுண்மி -  வைரஸ்

உருமாற்றம் -  mutation

இழையும் - நடமாடும்

வாசல் --  அது தோன்றிய இடம்

தழைய -  அது விருத்தி அடைய ( இதற்குரிய வினைச்சொல், தழைதல். தழைத்தல் அன்று).


முதலே = முன்னர்

( இங்கு  ஏகாரம் இசைநிறை.  அதாவது ஏகாரத்துக்குப்  பொருளில்லை. முதல் - முன்பு என்று மட்டும்  பொருள் கொள்க. )

விதமாய்  - உருமாறி, வேறுவிதமாய்.

விதம் என்பது ஒன்றிலிருந்து இன்னொன்று வேறுபடுவதால் உண்டாகும். விதத்தல் என்பது வினைச்சொல். விதந்து  என்பது வினைஎச்சம். ஆகவே விதமாய் எனின், தனிநிலையாக என்று பொருள்கொள்ளவேண்டும்.

பவனி என்பது பரவு அணி > பரவணி என்பதன் இடைக்குறை.

இங்கு நடமாட்டம் என்பது பொருள்.  பரவணி > ப(ர)வணி> பவனி.

திரிபுச்சொல்.

கருத்துகள் இல்லை: