வியாழன், 27 அக்டோபர், 2016

தேன் வந்து பாயுது காதினிலே - மது


மது  என்பது ஒரு சொல்லின் இடைச்சுருக்கம்,  அதாவது:   ம ‍  து.
மயக்குவது,  மயங்குவது என்ற இரண்டில் எதிலும்  இடைநிற்கும் எழுத்துக்களை எடுத்துவிட்டால்  மது கிடைக்கின்றது;  பூவின் இடை
நிற்கும்  சாற்றை எடுத்து தேனீக்கள் மதுவைத் தருவது போல.

மது என்பது கள்ளையும் குறிக்கும்.  ஏனை மயக்குத் தேறல்களையும்
குறிக்கும்.  தேனையும் குறிக்கும்.

மதுவுண்ட வண்டானேன் எனின் ,  வண்டு  கள் குடித்தது என்று பொருள் ஆகாது.  வண்டு தேனை உண்டது என்பதே பொருள்.

மது  என்பது பொதுப் பொருளினது  ஆதலின் " பூமது "  " மது மலர்"  என்றெல்லாம் வரணனைகள்  ஏற்றப்  படுவதுண்டு.

"தேன்  வந்து பாயுது  காதினிலே" என்று பாடலில் வந்தால்,  தேன்  நாவிற் பட்டால்  ஆங்கு  உணரப்  படும் இனிமை போலும் ஓர் இனிமை,  செவிக்குள் சென்று பாய்கிறது  ,  என்பதே பொருள்.  தேனின் இனிமை `செவி உணராது
என்று குற்றம் காணலாகாது.  ஒரு சிறு கைக்குழந்தையைப் பார்த்து, Sweet   
என்று  நாம் மட்டுமா சொல்கிறோம் ?  சீனர்  மலாய்க்காரர்கள், ஏனை  மக்களாலும் சொல்லப்படுகிறதே;  குழ்ந்தை என்ன சீனியா  வெல்லமா ?  மொழிகளின் இயல்பும் மனிதனின் பொருள் உணர்ந்து உணர்த்தும் தன்மையும் அப்படி .எல்லா மொழிகளிலும் இவ்வகை ஒப்பீடு  உள்ளது  அறிக.

மயங்குவது என்பதை  ம - து  என்று சுருக்குவது  அதனை வெளிப்படையாகச் சுட்டாமையினால் ஏற்பட்டது,   இது  இடக்கர் அடக்கல் போன்ற ஒரு தேவையாகவோ  விரைந்து வணிகம் செய்தற்பொருட்டோ  ஏற்பட்டிருக்கக் கூடும்.  நாளடைவில் இது ஒரு தனிச் சொல்லானது,

இது பற்றி மேலும் அறிய:

https://sivamaalaa.blogspot.sg/2016/04/blog-post_2.html

மது என்பது மலாய் மொழியிலும் வழங்குகிறது.  அது  மா - டு  என்று  ஒலிக்கப்  பெறும் .தமிழ் மூலங்களிலிருந்து பிறந்த சொல்  பல வேறு திரிபுகளால், பிற மொழிகட்கும்  சென்று வழங்குதல் தமிழின் பெருமையே ஆகும்,  

கருத்துகள் இல்லை: