வியாழன், 13 அக்டோபர், 2016

பசுமதி மணமுள்ள அரிசி

பசுமதி என்ற  சொல்லை ஆய்வோம்.

இது நல்ல மணமுள்ள அரிசி வகையாதலால் இப்பெயர் பெற்றது என்று
எண்ணுகின்றனர். வாசம் என்ற சொல்லிலிருந்து இது பிறந்ததென்பர்
வாசித்தல் நீண்டு செல்லும் வழி என்று பொருள்படும் வாய் (வாய்க்கால்)
என்பதிலிருந்து அமைந்தது. இது சமஸ்கிருதத்திலும் சென்று தங்கியுள்ள படியால், அம்மொழி அகரவரிசையை மட்டும் தேடிப்பார்த்தவர் அதைச் சமஸ்கிருதம் என்று முடிவுசெய்வது இயல்பு.   வாசம்  அல்லது மணம் ( பலவும் ) என்பவை புறப்பட்ட இடத்திலிருந்து  நீண்டு  பரவும் தன்மை உடையவை தான்.

வாய் >  வாயித்தல்
வாயி  > வாசி > வாசித்தல்.

ஆனால் வாசம் என்ற சொல்லினின்று வாசமதி என்று அமைந்து பின்பு அது வசுமதி ஆகி பின்னர் பசுமதி ‍> பஸ்மதி என்றானது என்பது "இருக்கலாம்" என்று சொல்லத்தக்கது என்றாலும், அது பசுமை+ மதி என்ற இரு சொற்களின் புனைவு என்பதே பொருத்தம் என்று முடிக்கலாம்.

பசுமையானது, புதியது, வாசமுள்ளது.  பசுமை மாறிய பொருட்களே
தீய நாற்றமெடுப்பவை. ஆகையால் பசுமை என்பது  வாசம் என்பதையும் உள்ளடக்கி, புதிது என்றும் பொருள்படுவது.மதி என்பது எங்கும் விரும்பப்படுவது என்றும் மதிக்கப்படுவது என்றும் பொருள்படும்.

எனவே,

பசுமை+ மதி = பசுமதி என்பதே உண்மையான சொல்லமைப்பு ஆகும்,

இது வட இந்தியா, பாக்கிஸ்தான் முதலிய இடங்களில் விளைந்தாலும்,
இவர்கள் இதை விற்பனைப் பொருட்டு விளைவிப்பவர்கள். அரிசி இவர்களின்  நிலைத்த உணவன்று. கோதுமையே இவர்கள் உணவு.
இது அங்கிருந்த தமிழர்களால் புகுத்தப்பட்டது.

முருங்கைக்காய்  வேம்பு முதலியவை மலாய்க்காரர்கள் அறிந்துகொண்டது போன்ற நிலையே.  ஒரு மலாய் நண்பர் முருங்கை மரத்தை வெட்டு என்கிறார்.  அதைப்  பற்றிய நன்மைகளைப்  பத்து நிமிடம் யானெடுத்துக் கூறின பின்
இப்போது முருங்கைச் சாறு சாப்பிடுகிறார்.    ( rebus  பண்ணுகிறார். )   இது என் வட்டாரத்தில் பரவி , ஒரு நாள் நான்  வீடு  சென்று சேர்ந்த காலை  முன்புறத்திருந்த  மரத்திலிருந்து சில கிளைகளை ஒடித்துக் கொண்டிருந்தார்கள்.  நல்லன பரவும்.

பசுமதி  -   நெல் விளைத்த தமிழர் இட்ட பெயராக வேண்டும். பசுமை மணம்  பரப்பும்  நெல் வகை.

கருத்துகள் இல்லை: