புதன், 5 அக்டோபர், 2016

இறந்துகொண் டிருப்பாரை

இறந்துகொண் டிருப்பாரை இறவாமல் பிழைப்பிக்கப்
ப‌றந்துவானில் கோள்தொட்ட பயன்மாந்தன் அறிந்திலனோ?


அறிந்திருந்தால் அன்புடையார் அவ்வுலகு செல்கையிலே
புரிந்துணராத் தான்மாய்தல் புரிவானின் வீண்மையுமேன்?

வீண்மைபல‌ தாம்விலக்கி வெற்றிகண்ட அறிவியலார்
காண்மரணம் பொய்யாக்கிக் கதிஉயர்த்தல் விளையாரோ?

விளைத்தபல விந்தைகளில் நிலைத்தியலா மனிதவுயிர்
பிழைத்திருக்கும் விந்தைதனை  இழைத்துயர்ந்து சிறவாரோ ?


தலைவன் இறக்கத் தொண்டன் தன்னை மாய்த்துக் கொள்கிறான் .
மரணம் [இல்லாப்  பெரு வாழ்வினை அறிவியலார் தரமுடியுமானால் 
பாவம், இத்தகு   தொண்டர்களை எல்லாம்  காப்பாற்றிவிடலாம் ,  அவர்களின்  தலைவர்களுடன் !!

இதில்  அந்தாதித் தொடை பயன்படுத்தப் பட்டது.

கருத்துகள் இல்லை: