சனி, 15 அக்டோபர், 2016

கடாட்சம்

மனிதனாய்ப் பிறந்தவன் தன் வாணாளில் பல துன்பங்களை அடைகிறான். துன்பம் தாங்கொணாத போது, அவன் இறைவனைப் பலகாலும் வேண்டுகின்றான். இறைவன் உடனே வந்து அருள்புரிதல்
கதைகளில்கூட பெரும்பாலும் வருவதில்லை. இறுதியிலேயே வருகிறான்; துன்பத்தை நீக்கி அருள்கிறான்.

ஒருவர் மலையினின்று விழப்போகுங்காலைதான் அவன் வந்தான்;
இன்னொருவர் கண்ணைப் பெயர்த்து அவன் கண்ணிலப்பினபின் தான்
வந்தான்! இனி வாழேன்; இனித் தாளேன் என்று அலறியபின் தான் வந்து
அஞ்சேல் என்று அருள்புரிந்தான்.

கடைசியில் ஆள்வோன் அவன்!

அது கடாட்சம் எனப்பட்டது.

கடை +  ஆள் + சு +  அம்  =  கடாட்சம்   ஆனது.

கடை  என்பதன்  ஐகாரம் கெட்டது    கட  என்று நின்றது.

எவ்வளவு  தொலைவிலும் கடந்து வருவோன் ;  மலைகளும் காடுகளும்
அவனுக்கு   ஒரு பொருட்டல்ல . கட  என்பதற்கு இப்படிப் பொருள்கூறினும்
அமையும்.

கட  + ஆள் + சு + அம் =  கடாட்சம் . கடந்தும் வந்தாள்வோன் தந்த அருள் .

கடாட்சம் தமிழ்.

கருத்துகள் இல்லை: