திங்கள், 31 அக்டோபர், 2016

தீபஒளி மகிழ்ச்சி எல்லை தொட்டதுவே............

வாயிலுக்கு வந்தாரை வருக என்றோம்
வந்துணவு பெறுகமனம் மகிழ்க என்றோம்
போய்வருவீர் வந்தெமக்குப் பெருமை தந்தீர்;
புகன்றிட்டோம் நிறைந்துளமே நன்றி என்றே.
தோய்நறுந்தேன் தீபஒளி மகிழ்ச்சி எல்லை
தொட்டதுவே இருநாட்கள் தொடரும் கொஞ்சம்
ஆய்வினுக்கும் அரும்பணிக்கும் ஓய்வு கண்டோம்
அகமகிழ்வுத் தீபஒளி மலர்ச்சி யாமே.

கருத்துகள் இல்லை: