வியாழன், 6 அக்டோபர், 2016

காய்ச்சலென்றால்

காய்ச்சலெனில்  மாத்திரையைப் போட்டுக் கொள்வாய்
கடைகளிலே பலவிதங்கள் கிட்டும் கேட்பாய்!
நாயுறக்கம் கொண்டாலும் தேக நன்மை
நாடுவது கடனன்றோ நாளும் நாளும்.
போய்க்கிடந்து மருந்துண்ண மாட்டே  னென்று
புலம்புவதாற் பயனுண்டோ இன்றேல் சென்றே
நோயகற்று மருத்துவரின் நுட்ப  ஆய்வில்
நுவல்மருந்து பெற்றருந்தி நூறு  காண்பாய் .



நுறு :  நூறாண்டு .







  

கருத்துகள் இல்லை: