திங்கள், 7 ஜனவரி, 2019

தூது

தூதன் என்ற சொல்லைக்  கவனிப்போம்.

தூ என்பது ஓரெழுத்துச் சொல்.

தூ என்றால்:

சீழ்.
பகை
பற்றுக்கோடு. SUPPORT
சிறகு
வெண்மை "தூவெண் மதி சூடி" (சைவத் திருமுறை)
சுத்தம். ( உத்தம் > சுத்தம்: தூய்மை முதன்மை என்று பண்டையர் கருதினர்).
தசை ( தசை> சதை. ச>த)
வலிமை.

இத்தனை பொருள்களும் உள்ள சொல்தான் இந்த ஓரெழுத்துச் சொல்.

தூதனாய் இருப்போன் மன்னன்பால் பற்றன்பு ( விசுவாசம்)   உடையவனாய் இருத்தல் முதன்மையாகும். ஐந்தாம்படைச்செயல்பாடுகள் உடையவன் தூதன் ஆதல் இயலாது.ஆகவே, தூய்மை குறிக்கும் தூ என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து   தூதன் என்ற சொல் பிறந்தது.  முன்செல்லுதலும் தூய்மையும் ஆகிய இரு கருத்துகளையும் அடக்கிய சொல்லாக இது முன்னைத் தமிழில் உருத்து எழுந்துள்ளது.   உருத்து =  தோன்றி.  இஃது ஓர் அரிய நற்சொல்.


மேலும் தூது செல்பவன் அரசுக்கு என்றும்பற்றுக்கோடு தருவோனாக , உடையவனாக செயல்படவேண்டும்  ஒற்றன் என்பவன் ஒன்றியிருந்து இரகசியங்களை    அறிந்துவருபவன்.

ஒன்று(தல்) > ஒன்று > ஒற்று (வலித்தல்) > ஒற்றன்.

தூதன், தூது : இத்தமிழ்ச்சொல் பலமொழிகளையும்
அளாவி நிற்பது பெருமைக்குரித்தேயாம்.

தூ ( அடிச்சொல்)

தூது ( து விகுதி) 
இவ்விகுதி பெற்ற பிற சொற்கள்
: மாது, கைது. விழுது தோது  வாது  சூது.
என்பன  காண்க)

தூது + அன்.

இது இருவகையாகவும் புணரும் சொல்.  தூதுவன் என்பதில் வகர உடம்படு மெய் வந்தது.   தூதன் என்பதில் துகரத்தில் நின்ற உகரம் கெட்டு , தூத்+ அன் என்ற இடைத்தோற்றம் அடைந்து விகுதி சேரத் தூதன் என்றானது.

பெரும்பாலும் ஆடவரே இத்தொழிலில் ஈடுபட்டமையால் பெண்பாற் சொல் வழக்கில் இல்லை.


தூதுவை, தூதினி எனலாம்!

தூ என்ற சொல்லின் மூலச்சொல் ஊ என்பது.  இது அ, இ. உ என்ற
முச்சுட்டுக்களில் ஒன்றான  உ என்பதன் நெடில் வடிவம்.  உ என்றால் முன்னிருப்பது, முன்செல்வது என்ற இவைபோலும் பல
முன்னிகழ்வுகளைக் குறிக்கும். தூதன் என்பவன் முன் செல்பவன்.
அரசன் ஒரு நாட்டிடம் தொடர்பு கொள்ள நினைக்கையில்
தூதனையே முன்  அனுப்புவான்.  எனவே தூது என்ற சொல்
முறையாக அமைந்துள்ளது.  ஒரு காதலி ஒரு தோழியைத் தூது
அனுப்புகிறாள்.  அதாவது உ > ஊ :  முன் சென்று அறிந்துவர
அனுப்புகிறாள் என்று பொருள்.

ஊ என்ற நெடிற்சுட்டில் தோன்றி முன்செலவைக் குறித்து, தூய்மை பற்றுக்கோடு ஆகிய நற்குண நற்செயல்களையும் குறித்து,
முன்னணியில் கருதற்குரிய இனிய அமைப்பை இது
வெளிப்படுத்துவதை பகுத்தறிந்துகொள்க.

ஒற்றன் என்பவன் ஒன்றி இருந்து உண்மை அறிந்து வந்து சொல்பவன். தூதன் ஒற்றன் என்ற இவ்விரண்டு சொற்களையும் ஒருபொருளன என்று எழுதுவோர் / பேசுவோர் கருதினும் இவற்றின் அமைப்புப் பொருள் வேறு என்பதுணர்க.  ஒற்றன் ஒன்றி இருந்து யாரையும் பார்க்காமலும் பேசாமலும்  ( அதாவது பேச்சுவார்த்தைகள் நடத்தாமலே ) திரும்பவந்து   கண்ட உண்மை சொல்பவன்.  ஆகவே அம்பாசடர் என்ற ஆங்கிலச் சொல்லை ஒற்றர் என்று மொழிபெயர்த்தல் பொருத்தமன்று.

தூதன் என்ற சொல்லும் பல மொழிகளில் பரவியுள்ளது.   பண்டைத் தமிழரசர் சீனா,  உரோமாபுரி வரை தம் தூதர்களை அனுப்பியுள்ளனர்.  ஆகவே பரவியதில் வியப்பு ஒன்றுமில்லை.  தமிழரின் உலகு அவாவிய   அரசியல் நட்புறவையே இது காட்டுகிறது.  நாம் பெருமிதம் கொள்வதற்குரிய சொல்.

ஊ ( முற்செலவு என்பது இதன் பொருள்களில் ஒன்று).
ஊ > ஊது > தூது > தூதன்.  தூதுவன்.

முன் சொன்னபடி,   தூது என்பதில் து  என்பது விகுதி.

இதுபோல் து விகுதி பெற்றவை   இன்னும் சில:  கை > கைது;  பழ > பழுது;  விழு > விழுது. மரு > மருந்து;   விரு > விருந்து. கழுத்து.

இது வினையிலும் பிறவகைச் சொற்களிலும் வரும்.

டுத்தா என்ற மலாய்ச் சொல் தூதர் என்பதுதான்.  (ஜாலான் டுத்தா).

அறிந்து இன்புறுவீர்.

திருத்தம் பின்.  உலாவியில் சிறிய கோளாறு உள்ளது.  பின் சரிசெய்யப்படும்.












கருத்துகள் இல்லை: