வெள்ளி, 25 ஜனவரி, 2019

நாளைத் தமிழ் மணம்

நித்தலும்  வளரும் கருத்துகளை
நிறுத்தம் இலவாய் எழுதிடுவேன்
மெத்தவும் மகிழ்வு தருமிதனை
உத்தமம் செய்பொழு தின்றிலதே;

நேற்றும் தருணம் வாய்த்திலது
நினைப்பு மட்டும் உறுத்தியது;
காற்று வாங்கும் படிநேர்ந்த
கரிசில் பயணம்  பொருத்தமுற.

இன்றும் ஓய்ந்த வாறிருந்து
நாளைக் கருத்துகள் தந்திடுவேன்;
பொன்றாப் புகழ்சேர் தமிழ்மலரும்
பூத்துப் பொலிந்து மணம்தருமே.



கருத்துகள் இல்லை: