செவ்வாய், 8 ஜனவரி, 2019

பூசையின்போது கவனம்.



 ( பூசையில் திருப்புகழ் பாடும்போது
சிலர் சொந்தக் கதைகள் பேசிக்கொண்டிருந்தனர் ).

காணொளியைப் பதிவேற்ற இயலவில்லை.





பத்திசெய்து பரமன்புகழ் பாடுகின்ற  பேர்முன்
பலப்பலவும் பலத்தகுர லால்பேச  லாமோ?

புத்தியுடன்  புடையமர்ந்து  புன்மைஎண  மின்றிப்
பூசைதனைக் கவனமுடன் போற்றுமனப் பான்மை

எத்திசையில் வாழ்வோரும் ஏய்ந்திருந்து செய்தல்
ஏத்துபவர் யார்க்கெனினும் இயல்வதொரு கடனே

மத்தெனிலே பானையதன் மத்தியிலே இட்டு
மகளிர்கடை வார்வெளியில் மாறுவதும் இலதே.  


புடை:  பக்கத்தில்
புன்மை :  தாழ்ந்தவை
எணம்:   எண்ணம்'
ஏய்ந்து :  பொருந்தி'
ஏத்துபவர்:  சாமி கும்பிடுவோர்
இயல்வது:  முடிந்தது
மத்து:  கடைகட்டை
மத்தி  :   நடு

இலதே:  இல்லையே.





இந்தக் காணொளி திருவண்ணாமலைக் கோவிலுள் எடுக்கப்பட்டது. ஆனால் ஓடவில்லை; மாறாகப் படமாக மாறிவிட்டது,



கருத்துகள் இல்லை: