வியாழன், 17 ஜனவரி, 2019

வன்மை பயில்வார்

நாயினைப் பூனையை வீட்டுள் பழக்கியவன்
பாய்புலி சிங்கம்பால் தோற்றானே-----சாய்வறிந்தான்
வாய்க்குச்சோ றிட்டாலும் வன்மை பயில்வாரைத்
தோய்க்குநட் பில்லை துணி. 

பாய்புலி -  வினைத்தொகை:  பாயும்புலி
சாய்வு - எப்பக்கம் எது என்னும் தன்மை
வன்மை -  வலக்காரம்  (பலத்தகாரம் )
தோய்க்கு -  தோய்க்கும். ஈடுபடுத்தும்.
அன்புத் தொடர்பில் ஈடுபடுத்தும்.
துணி -  துணிவுகொள்;  அல்லது வெட்டிவிடு
( இருவாறு பொருள் கொள்ளலாம்).
துணித்தல் :  வெட்டுதல்.

சிங்கம் :  அரிமா.
சிங்கம் பற்றிய சொல்லமைப்பு அறிய:
 https://sivamaalaa.blogspot.com/2018/11/blog-post_88.html


கருத்துகள் இல்லை: