புதன், 4 மே, 2016

On violence against children பிள்ளை கடத்தி..........

http://www.usatoday.com/story/news/nation/2016/05/03/new-mexico-girl-killing-arrest/83906060/

சிறுவர் சிறுமியர்க்குச் சீருடன்பார்  மீதில்
நிறுவிய நல்வாழ்வு நேர --- உருவிய
வாள்கொடு பின்செல்ல வேண்டுமோ இன்றெனில்
மாள்நெறி  மன்னுமோ தான்.

பிள்ளை கடத்திப் பிழைச்செயல் செய்வாரை
அள்ளியே கம்பி அறைக்குளிட்டு  ---- உள்ளுக!
நல்லன  நாடிடுக!  நாளைக்குள்  நேர்செலென்
றொல்லும்வாய் ஓங்கிச் செயல்.

பெற்றோர் கதறவே    பிள்ளையைக் கொன்றானை
மற்றோர் கணமுமே தப்பாமல் ---தெற்றின்றி
மன்றிலே  தீர்ப்பளித்து  மாலுதல் நீக்கியே
கொன்றொறுக்கக் கூடா கொலை.

வாள் கொடு  = வாளை எடுத்துக்கொண்டு 
மாள்  நெறி  = மரணத்தில் முடிதல் 
ஒல்லும் வாய் = இயன்றவரை 
தெற்றின்றி =  தவறுகள் இல்லாமல் 
மாலுதல் =  மயக்கம்  , ஐயப்பாடு 
கொன்றொறுக்க =  மரண தண்டனை விதிக்க;
கூடா =  அதிகம் ஆக மாட்டா. (கொலை கூடா )

கருத்துகள் இல்லை: