திங்கள், 9 மே, 2016

ஏன் நான் பிறக்கவில்லை

ஏன் நான் பிறக்கவில்லை ‍‍ === என்
இயற்றமிழ் ஏய்ந்திடு இன்புகழ் காலத்தில்



பல்புகழ் நாட்டியவன் ‍‍‍== இயற்
பைந்தமிழ் ஓங்கிய கல்விதொல் காப்பியன்
வெல்தரு மண்திருவோன் === அவை 1
விளங்க வழங்கு நலங்கெழு நாட்களில் (  ஏன் 

தெள்ளு தமிழ்முனிவன்  ‍‍=== ஒரு
தெய்வப் புலவனென் றிவ்வுல கேத்திடும்
வள்ளுவன் செய்திருவாம் === குறள்
வந்துதிர்ந் திட்டபொன் செந்தமிழ் வேளையில்  (ஏன் 

பாண்டி நெடுஞ்செழியன் ‍‍=== முன்
பாவலர் மேலவர் மாங்குடி யார்புனை3 
ஈண்டிய4 பாடல்களை ==== பாட  
 இருசெவி கேட்கவும்
 கண்களும் காணவும்  (ஏன் 

Notes:
1.அவை =  சபை ,மன்றம்
2.வென்று தந்த நிலத்தின் திருவினை உடைபோன் ‍ நிலந்தரு திருவிற் பாண்டியன்:  
3பாண்டியன் நெடுஞ்செழியன் அவைக்களத் தலைமைப்புலவர் மாங்குடி மருதனார்,
4 ஈண்டிய -  மிகுந்த ,  நிறைந்த 

This does not appear in proper format on my screen,  Hope your screen view is acceptable.Edit probs

கருத்துகள் இல்லை: