புதன், 18 மே, 2016

சி. போ.10 சிவம் ஆன்மா பாகுபாடு

Read last post and continue:




எங்குமிருக்கிறது எனப்படும் சிவம் தானே என்ற உள்ளூணர்வு ஏற்படுதல் வேண்டும், தானே என்ற பதம் ஆன்மா என்பதை மறத்தல் ஆகாது. இங்ஙனம் சொல்லாலும் எண்ணத்தாலும் அறிந்த நிலை கடந்து சிவம் ஆன்மாவாகிய தானே என்கையில் ஏற்படும் காணுதலே ஆன்ம தரிசனம் என்பதாகும்.

இங்ஙனம் நடைபெற்றாலும், ஆன்மா ஓரிடத்திலேயே (உடம்பினுள்ளேயே) இருக்கிறது என்ற ஒரு வரம்பு அளாவிய எண்ணம் நீங்கிவிடுவதில்லை. இது நீங்குவதாயின் சிவமாகிய தான் (ஆன்மா) எங்குமிருக்கிறது என்று உள்ளத்துள் நிலைநாட்டிக்கொள்ள வேண்டும். இது சாதனை ஆகும். இங்ஙனம் நடைபெறவே, சிவத்துக்கும் ஆன்மாவிற்கும் இடை நிற்கும் பாகுபாடு முற்றுப்பெறும். அபேதம் சித்திக்கும்.



மேலும் சிவத்தின் ஆன்மாவுடன் கூடிய முழுமுதன்மை சுட்டி அறியத்தக்கதன்ன்று. சுட்டாது உள்ளுணர்வோடிருக்க, பாகுபாடின்மை திறம்பெறும்.




கருத்துகள் இல்லை: