வியாழன், 12 மே, 2016

சரித்திரம் - சொற்பொருள்

சரித்திரம் என்ற சொல்லைப் பற்றித் தெரிந்துகொள்வோம். இதற்குத் தமிழில் " வரலாறு " என்று சொல்கிறோம். வரலாறு என்பதை "நடை பெற்றதைச் சொல்வது " என்று சொல்லலாம். சரித்திரம் என்பதும் அதையே குறிக்கிறது என்றாலும் அச்சொல்லில் மற்றொரு பொருளும் உள்ளது.. அது யாது?  

சரித்திரம் -  சொற்பொருள் :

நடைபெற்றதைச் சரியாகவும் திறம்படவும் உரைக்கும் கலையே சரித்திரம். சரி + திறம் = சரித்திறம் > சரித்திரம் ஆனது. திறம் - திரம் என்ற முன்னொட்டாய் ஆனதைப் பல இடுக்கைகளில் முன் குறித்துள்ளேன்.

ஆனாலும் சில எடுத்துக்காட்டுகள்: 


என்று வெகுண்டு எழுந்து திறமாக ஒன்றை எதிர்கொள்வது ஆத்திரம். இது வெகுண்டோன் நடக்கும் விதத்தைக் கவனித்தமைந்த வழக்குச் சொல் ஆகும். இங்கு திறம் என்பது
திரமானது -   அதாவது  ‍ ஒரு பின்னொட்டு ஆனது.

வேண்டுதல்கள் பலித்து நிலைபெற ஓதப்படுவது மந்திரம் 2   . மன்னும் ( நிலைபெறும்) திறத்தை வழங்கும் வலிமை உடையது என்னும் நம்பிக்கைப் பொருளது. மன்(னு) + திறம் = மன் திறம் > மந்திரம். ஆனது இது முன்னும் ( thinking, meditating) திறம்; பின் மன்+திறம் > மந்திரம். ஆயது எனறு பொருள் கூறினும் ஒக்கும். எப்படியாயினும் தமிழே. 1

இதிகாசம் என்ற சொல்லை அடுத்து அறிவோம்.

குறி ப்புகள் 

ஐந்திறம்  என்பதே  ஐந்திரம்  ஆகிவிட்டது .   இது  இந்திரன் எழுதிய  இலக்கணத்தைக்   குறிக்கும் என்று  கூறப்படுகிறது.  உண்மையில்  எழுத்து. சொல் பொருள் யாப்பு அணி என்ற ஐந்தியலே  ஐந்திரம்.  தமிழிற் சொற்கள் சில  றகர ரகர வேறுபாடு இன்றி வழங்கும். 
அறிஞர்  கா  சு  பிள்ளையும்  இங்ஙனமே   கருதினார் .

2 தொல்காப்பியம் கூறும்பொருள்  இதுவன்று.
மறைமொழி தானே மந்திர மென்ப (தொல். பொ. 491)




கருத்துகள் இல்லை: