செவ்வாய், 24 மே, 2016

கோணல் உலகினை நேர்செய யாருளர்

எண்ணூற்றெண் பத்திரண்டு ---- எல்லாம்
என்னால் இயன்றதென் றியங்கிய மார்க்கோசு
கொன்றொழித் தாடுதொகை ---- இதைக்
கூறிடுங் காலோர் கொலைஞன்முன் வந்தனன்


இலங்கையில்  (இ ) ராச பக்சே  - இவன்
ஏற்றிய போரினில் நூற்றுறழ் ஆயிரம்
கலங்கு  தமிழர்களைக்--- கொன்று
களைந்தனன் காட்டும் கணக்கினைக் காண்பிரோ

காலமே யாதாயினும் ---- ஒரு
கார்முகில் மேல்வந்து சூழ்தரல் போல்அலங்
கோலம் விளைப்பவர்கள் ----- வாழும்
கோணல் உலகினை நேர்செய யாருளர்


This may not appear correctly on your screen owing to a bug herein.

கருத்துகள் இல்லை: