புதன், 18 மே, 2016

வெள்ளத்தின் சீற்றம்

வெள்ளத்தின் சீற்றம் விலக்கற்கு நீர்தங்கும்
பள்ளங்கள்  குட்டை குளங்களோ  டேரிகளை
மெள்ளத்தூர் வாரித்தான்   மேன்மை புகுத்திடின்
எள்ளனைத்தும்  வாரா  திடர்.

தெரிந்தும் இதற்குத் தெருள்தீர்  வதனைப் 
புரிந்து முடிக்காமல் புண்ணியமொன் றில்லை 
வரிந்துகட்டு  வல்லேசெய்  வான்விரைசே  வைமற்
றெரிந்துபடும் துன்பம் எலாம்.       

கருத்துகள் இல்லை: