வெள்ளி, 6 மே, 2016

எப்படிநுழைந்தாய் வீட்டினுள்ளே

எப்படிநுழைந்தாய் வீட்டினுள்ளே
இடுப்படி கொடுத்து என்புடைப்பேன்
சொற்புனை வினிலே ஆழ்ந்திருந்தேன்
சூழலைக் கெடுத்தெனைச்  சுழலவைத்தாய்.

இரவினில் வருவது வாடிக்கையோ
இருப்பவை காண்பதும் வேடிக்கையோ
அரவினி வருமுனை விட்டுவைத்தால்
ஆதலின் உன் தலை குட்டுவைப்பேன்,

நறவெனச் சுவைப்பதெம் உணவினையோ
நானவை களைவதும் குணவினையோ
இறவினைத் தப்புக இனியொருநாள்
இவண்வரும் ஆவலுன் நினைவறவே.

கருத்துகள் இல்லை: