சனி, 18 ஆகஸ்ட், 2018

சமுத்திரம் - குமரிக்கண்டம் தொடர்பு.

சமுத்திரம் என்ற சொல்.



இன்று சமுத்திரம் என்ற சொல்லைப் பற்றித் தெரிந்துகொள்வோம்..



இச்சொல்லைப் பலவாறு முன்னைய ஆசிரியர்கள் கண்டனர். சிலர் தமிழன்று என்றும் கூறியுள்ளனர்.



தென்னிந்திய மொழிகளிற் பல பேச்சு வழக்குத் திரிபுகளைக் கொண்டு ஆக்கப்பட்டவை என்றே கூறல் தகும். இவைபோலவே சமஸ்கிருதம் என்றும்வடமொழி என்றும் கூறப்படும் இந்திய மொழியும் தமிழ்ப்பேச்சு வழக்குத் திரிபுகளில் பலவற்றைக் கொண்டுள்ளது. இதைப் பல இடுகைகளில் சுட்டிக்காட்டியுள்ளோம்..



மூன்று பக்கங்களிலும் கடலினால் சூழப்பட்டது தென்னாடு எனப்பட்ட தென்னிந்தியா. முத்திரம் என்ற சமுத்திரத்தின் இறுதிப்பகுதி சொல் மு+திறம் என்ற இரு தமிழ்ப் பகவுகளின் ஓரமைவே ஆகும். இதன் பொருள் மூன்று பாகங்களிலும் கடல் என்பதுதான். ரகர றகர வேறுபாடு இன்றி வழங்கும் சொற்கள் பல உள்ளான. திறம் - திரம் என்பது அத்தகைய சொற்களில் ஒன்று. இதுவும் முன் இடுகைகளில் காட்டப்பட்டதுதான்.. திறம் என்பது விகுதியாய் வருங்கால் திரம் என்று திரிந்து சேரும் என்பது கண்டுரைக்கப்பட்டுள்ளது..



இவ்வாறாக, சமுத்திறம் > சமுத்திர மென்பதிலுள்ள ச என்பது சா என்ற இன்னொரு தமிழ்ச்சொல்லின் ஒலிச்சுருக்கமே ஆகும். இது முத்திறமும் (மூன்று பக்கங்களிலும் ) கடலென்/றும் கடலுக்குச் சென்றால் சாவு என்றும் பொருள்படுகின்றது. அடுத்தடுத்து இரண்டு கடல்கோள்களாவது நடைபெற்றிருக்கின்றன என்று தெரிகின்றபடியால் அதனாலேற்பட்ட கிலியின் காரணாமக அமைந்த சொல்லே சமுத்திரம் என்பதாகும். சா என்பதிலிருந்து அமைந்த சவம் என்னும் சொல்லும் அந்நெடில் குறுகியே அமைந்ததென்பது காண்பீராக.. வினையிலிருந்து பி/ற பெயர்களும் இவ்வாறு அமைந்துள்ளன. தோண்டு> தொண்டை; காண் > கண். தீட்டு (தீட்டுதல் ) > திட்டம். என்ற உதாரணங்களிலிருந்து இவற்றை நன்றாக உணரலாம்.



இச்சொல்லிலிருந்தும் குமரி மூழ்கியதும் காவிரிப்பூம்பட்டினம் மூழ்கியதும் தமிழருக்கும் பிறருக்கும் மிகுந்த கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தன என்பது தெளிவு. காலம் செல்லச்செல்லவே இவ்வச்சம் முதலியன மறைந்தன. மறைந்தபின்னர் வந்த சொல்லாய்வாளர் இதை உணர்ந்திருக்கவில்லை.
கடல் சாகரம் என்பனவற்றுக் கெழுதிய விளக்கம் இங்கு உள்ளது. அதையும் கண்டுணர்க.

http://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_78.html


கருத்துகள் இல்லை: