செவ்வாய், 28 மார்ச், 2017

போராட அறியாத சங்கத் தமிழர்

சங்கத்த மிழருக்குத்  தெரியும் போர்தான்;
சற்றுமறி யாரவர்போ ராட்டம் என்றால்!
எங்கெங்கு நாட்டினிலே தேடி  னாலும்
இல்லையிந்தப் போராட்டம் என்ப தொன்று!
பங்குபெறு மக்களாட்சி என்ப தில்லை;
பயன்வேண்டி மணியடித்தார் அன்றும் உண்டு.
தங்கிமிளிர் அமைதியது பொங்கும் வண்ணம்
தமிழரசு இயன்றதெனச் சொல்வார் உண்டே.


மிகுந்த போராட்டங்கள் நடைபெற்ற இந்திய மாநிலம்
தமிழ்நாடுதான் என்கிறார்கள் (புள்ளிவிவரங்கள்).
2015 எண்ணிக்கை: 20450.
அடுத்து பஞ்சாப் 13089





கருத்துகள் இல்லை: