வெள்ளி, 17 மார்ச், 2017

மொழி நூலும் தேவியும்

மொழி என்பது ஒரு கருத்தறிவிப்புக் கலை. ஓர் அறிவியல் என்றுகூடச்
சொல்லலாம். ஓர் இசைவட்டு வாங்குகிறவன், அதை அதற்குரிய இயந்திரத்தில் இயக்கி  இசையை நுகர்தல் வேண்டும். அஃதின்றி அந்த‌
வட்டு எந்த மூலப்பொருள்களால் ஆனது என்பது அவனுக்குச் சற்றும் பயன் தரா அறிவாகும். அதுபோலவே ஒரு சொல்லைப் பயன்படுத்திக்
கருத்தினைக் கேட்பவன் புரிந்துகொள்ளுமாறு செய்வதே மொழி. அவனுக்கு மூலங்கள் தேவை அற்றவை.

இருப்பினும் சொல்லைப் பயன்படுத்தும் புலவனுக்கும் கவிவாணனுக்கும் இடமறிந்தும் உண்மைப்பொருளறிந்தும் பயன்படுத்த மூலச்சொற்கள் அடிச்சொற்கள் பற்றிய ஆய்வு உதவியாக இருக்கும், மேலும் பழஞ்சொற்கள் அமைந்துள்ள முறையறிந்தால் புதுச்சொற்களை அமைக்கும் முறையை நாம் அறிந்து மொழியை‍ , அதாவது நம் மொழியை மட்டுமின்றி எம்மொழியையும் வளர்ச்சிபெறச்
செய்யும் திறத்தைப் பெறலாம். உலக மொழிகள் அனைத்துக்கும்
இது பொதுவான கருத்து ஆகும்.

பிரித்தியங்கறா தேவி என்ற கடவுட் பெயரை நாம் 2013 வாக்கில்
அறிந்துகொண்டோம். இந்தப் பெயரைப் படைத்த பூசாரி அல்லது புலவன் மிக்கக் கற்பனை ஆற்றலும் சிந்திக்கும் திறமும் உடையவன்.
இந்தத் தேவியைத் தனியாக நிறுவினாலும் சிவத்துடன் தேவிக்கு உள்ள உறவு ஒன்றும் அற்றுப் போய்விடுவதில்லை என்ற உணர்வில்
அவன் அச்சொல்லை உருவாக்கினான். அது சொல்லாலே நமக்குப்
புரிகின்றது. சொல்லை அமைத்தபின், வணங்கும் பற்றனுக்கு (பத்தனுக்கு அல்லது பக்தனுக்கு)  மூலங்கள் தேவைப்படா. இறையுணர்வு முதன்மையாம் அன்றி சொல்மூலம் தேவையற்றது.
சொல்மூலத்தைவிடச் சூடன் சாம்பிராணி அவன் பார்வையில்
முன்மைபெறுதல் காண்க.

பிரித்தியங்கறா (~ரா) தேவிபற்றிய எம் முன் இடுகை காண்க:

தலைப்பு   :  மொழி நூலும் தேவியும்  

கருத்துகள் இல்லை: